Category கட்டுரைகள்

தொண்டை நாடு பெயர் காரணம்

தொண்டை நாடு பெயர் காரணம் : தொண்டை நாடு தமிழகத்தின் பழமையான நாடுகளில் ஒன்றாகும். இப்பகுதி மூவேந்தரின் ஆட்சியில் நேரிடை தொடர்பு இல்லாது இருப்பினும் சேர சோழ பாண்டிய நாடுகளை விடப் பழமையான நாட்டுப் பிரிவுகளையும் மனித நடவடிக்கைகளையும் கொண்ட பகுதியாக விளங்கியது. சோழ மன்னனுக்கும் பீலிவளை என்ற நாக இளவரசிக்கும் பிறந்த குழந்தை கிழக்குக்…

முந்நூறு இராமாயணங்கள்

முந்நூறு இராமாயணங்கள் எத்தனை இராமாயணங்கள்? முந்நூறு? மூன்றாயிரம்? சில இராமாயண காவியங்களின் முடிவில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது: எத்தனை இராமாயணங்கள் இருந்து வருகின்றன? அதற்கு விடையளிக்க பல கதைகள் உலாவுகின்றன. அவற்றில் ஒன்று இங்கு. ஒரு நாள் இராமன் தன் அரியணையில் அமர்ந்திருக்கும் போது, அவனது மோதிரம் கீழே விழுந்தது. மண்ணைத் தொட்டதும், அந்த மோதிரம்…

வேளாண்மை உற்பத்தி : முதன்மைக் குலமும் துணைக் குலங்களும்

வேளாண்மை உற்பத்தி : முதன்மைக் குலமும் துணைக் குலங்களும் வேளாண்மை உற்பத்தியும் அதுசார்ந்த உழைப்புத் தேவையும்தான் பெருவாரியான மக்கள் திரளை மருத நிலத்தில் நிலையாகக் குடியிருக்கச் செய்திருக்கின்றன. பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகள், வாழ்நிலைகள், தொழில் பிரிவுகள், அரச உருவாக்கம் எனப் பல்வேறு சமூக உருவாக்கம் மருத நிலத்தில்தான் நடைபெற்றிருக்கின்றன. அதனால்தான், மருத நிலத்தில் மக்கள் குடியேறி…

இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள்

நாட்டின் பெயராக அமைந்த ஊர்கள் பல பிற்காலத்தில் பிரமதேயமாகவும், நகரமாகவும் தேவதானமாகவும் மாற்றம் பெற்றுள்ளது. நாடுகளுக்கு பெயரிடுவதில் வேறு வகையும் இருந்திருக்கின்றன. அவை கூற்றம், வளநாடு, ஆற்றுப்போக்கு, குளக்கீழ் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன. இவை இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற முறையில் இடம்பெற்ற பெயர்களாகும். ஆனால் நாடு, கூற்றம் போன்ற வழக்கமே அதிகளவில் இருந்திருக்கின்றன. குளகீழ், ஆற்றுப்போக்கு…

அடிமையைக் குறிக்கும் சொற்கள்

அடிமையைக் குறிக்கும் சொற்கள் : தமிழகத்தில் அடிமை முறை நிலவியதற்கான சான்றுகளில் முக்கியமானதாக அமைவது அடிமையைக் குறிக்கும் சொற்களாகும். தற்போது நாம் பயன்படுத்தும் அகராதிகளுக்கு முன்பு நிகண்டுகள் என்பன பயன்பாட்டில் இருந்துள்ளன. இவற்றுள் திவாகரம் – பிங்கலம் – சூடாமணி என்ற மூன்று நிகண்டுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவை மூன்றிலும் அடிமையைக் குறிக்கும் சொறகள் எவை…

பழங்காலத் தொழில்பிரிவுகள்

பழங்காலத் தொழில்பிரிவுகள் ‘அந்தணர், அரசர், அளவர், இடையர், உப்பு வாணிகர் (உமணர்). உழவர், எயிற்றியர், கடம்பர், கடைச்சியர், கம்மியர், களமர், கிணைஞர். கிணைமகள். குயவர் குறத்தியர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர். கோசர், தச்சர்,துடியர், தேர்ப்பாகர், நுளையர், பரதவர். பறையர். பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொருநர், மடையர், மழவர்,…

தொல்காப்பியம் காட்டும் தமிழர் வாழ்வு

சங்க இலக்கியத்துக்கும் முற்பட்டதாக தொல்காப்பியம் இருக்க முடியாது எனவும், சங்க காலத்துக்கு அடுத்து வந்த களப்பிரர் காலத்தில் தான் தொல்காப்பியம் பிறந்திருக்க வேண்டும் என்ற கருத்தை நூலாசிரியர் முன்வைக்கிறார். தொல்காப்பியச் சிந்தனைகள் சில திருக்குறளிலும் இருப்பதால், இரண்டு நூல்களும் சமகாலத்தைச் சேர்ந்தவை என்று கூறும் நூலாசிரியர், இரண்டும் களப்பிரர் காலத்தில் பிறந்தவை எனவும், அதனாலேயே அக்காலத்திய…

நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு

நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு இந்நூலாய்விற்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் பட்டியல்கள், நிலப்படங்கள் இவ்வியலில் தரப்பட்டுள்ளன. முதலில் பாண்டிய நாட்டில் இருந்த நாடுகளின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளது. இவற்றோடு பாண்டிய நாட்டின் எல்லைப்புற நாடுகளும் உரிய நிலப்படங்களோடு இவ்வியலில் இணைக்கப்பட்டுள்ளது. பாண்டியநாடு இருபத்தொரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எண்ணிடப்பட்டு இருபத்தொரு நிலப்படங்கள் இவ்வியலில்…

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள்

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள் பாண்டியநாட்டில் அழகன்குளம், கீழடி, மாங்குடி, கொற்கை அகழாய்வுகளில் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் நூற்றுக்கு மேற்பட்டுக் கிடைத்துள்ளன. தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானையோடுகளில் பல வணிகர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் வடமொழிப் (பிராக்கிருதம் -சமஸ்கிருதம்) பெயர்களும் தமிழ் மொழிப் பெயர்களும் காணப்படுகின்றன. மேலும் இவற்றில் தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிப் பெயர்களும் உள்ளன. கீழடியில் நடைபெற்ற…

பாசனத் தொழில்நுட்பம்

பாசனத் தொழில்நுட்பம் : நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், பள்ளமும் மேடுமான நிலப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுவது எளிதல்ல. வீணாகும் நீரினை குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் தேக்கி வைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்துவது மழைக் காலங்களில் ஆபத்தானது. எனவே, நிலப்பரப்பியலின் கூறுகளை ஏற்றதாகப் பயன்படுத்தி நீரினை வேளாண்மைக்குப் பயன்படுத்த வேண்டும். காவிரிச் சமவெளி போன்ற நிலப் பகுதிகளில் நீரினைப்…