ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு – புலவர் கா. கோவிந்தன்

240

தொன்மை வாய்ந்த தமிழினத்தின் வரலாறும், வாழ்வியல் பண்பாடும் உலகம் போற்றும் உச்ச நிலையை அடைந்திருந்தது என மெச்சுவர். ஆசிரியரின் வருகைக்கு முன்னரே தென்னகத்தில் நாகரிகப் பண்பாட்டுக் கலையில் சிறந்த தமிழினம் பல கலைகளிலும் சிறந்து விளங்கியது என்பது ஆய்வாளர்கள் கனிப்பு. அவர்களுடைய வாழ்க்கை முறைகளைப் பற்றி நற்றிணை, குறுத்தொகை, புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பழங்கற்காலம், புதிய கற்காலம், உலோகக் காலம், வேதகாலம் எனப் பல்வேறு காலக்கட்டங்கள், ஆய்வாளர்களால் உரைக்கப்பட்டாலும், தென்னகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களின் அடிப்படையில் வாழ்ந்து நாகரிகத்தில் சிறந்து விளங்கிய தமிழ்மக்கள் வரலாற்று நிகழ்வுகள், பழக்க வழக்கங்கள் ஆரியர் வருகைக்கு முன்னர் இருந்த நிலை பற்றி ஆய்வு செய்வதே இந்நூல்.

No. of pages: 232

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தொன்மை வாய்ந்த தமிழினத்தின் வரலாறும், வாழ்வியல் பண்பாடும் உலகம் போற்றும் உச்ச நிலையை அடைந்திருந்தது என மெச்சுவர். ஆசிரியரின் வருகைக்கு முன்னரே தென்னகத்தில் நாகரிகப் பண்பாட்டுக் கலையில் சிறந்த தமிழினம் பல கலைகளிலும் சிறந்து விளங்கியது என்பது ஆய்வாளர்கள் கனிப்பு. அவர்களுடைய வாழ்க்கை முறைகளைப் பற்றி நற்றிணை, குறுத்தொகை, புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பழங்கற்காலம், புதிய கற்காலம், உலோகக் காலம், வேதகாலம் எனப் பல்வேறு காலக்கட்டங்கள், ஆய்வாளர்களால் உரைக்கப்பட்டாலும், தென்னகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களின் அடிப்படையில் வாழ்ந்து நாகரிகத்தில் சிறந்து விளங்கிய தமிழ்மக்கள் வரலாற்று நிகழ்வுகள், பழக்க வழக்கங்கள் ஆரியர் வருகைக்கு முன்னர் இருந்த நிலை பற்றி ஆய்வு செய்வதே இந்நூல். முதல் மனித இனம் தோன்றியது தென்னகம் என்னும் மனிதவியல் ஆய்வாளர்களின் கருத்துப் படியும், “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி” தமிழினம் என்னும் கருத்தப்படியும் செம்மாந்து நடைபெயின்ற தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு நாகரிகம், தொழில்கள், அணி மணிகள், சமுதாய அமைப்பு முறை, திருமண முறை, போக்குவரத்து முறைகள், வணிகங்கள் எனப் பல்வேறு வாழ்க்கை முறைகளையும் சங்க இலக்கியச் சான்றுகளுடன் ஆசிரியர் ‘ஆரியர்க்கு முற்பட் தமிழ்ப் பண்பாடு’ என்னும் பெயரில் ஆய்வு செய்து தொகுத்தளித்துள்ளார் ஆசிரியர் புலவர் கா. கோவிந்தன்.

Weight0.25 kg