Description
மனித வாழ்க்கைக்கான அவசியம், அதை அடையும் வழிமுறைகளை திருமூலர் வகுத்த திருமந்திரத்தின் வாயிலாக விளக்கியும், அவற்றைப் பின்பற்றுவதால் ஏற்படும் நலன்களை நுட்பமாகவும் ஆராய்கிறது இந்த நூல். இயந்திரத்தனமாகிவிட்ட நவ நாகரிக வாழ்க்கை முறையில் மனித வளம் என்பது பொருளாதார ரீதியில் வாழ்க்கையை மேம்படுத்துவது என்று மேலோட்டமாகப் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால், மனித வளம் என்பதை உடல் நலம், மன நலம், இறை நலம், சமூக நலம் ஆகிய தலைப்புகளில் திருமூலரின் திருமந்திரத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்டு நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.