பண்டைய தமிழக வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவருக்குமான விரிவான, எளிமையான அறிமுக நூல். தமிழகத்தின் பெரும்பகுதியை மிக நீண்ட காலத்துக்கு ஆண்டவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள். முதன் முறையாக சங்க காலத்தில் நமக்கு அறிமுகமாகும் மூவேந்தர்கள் 14ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் கோலோச்சியிருப்பது உண்மையிலேயே பேரதிசயம்தான். மூவரில் வரலாற்றுத் தரவுகள் அதிகம் கொண்டிருப்பவர்கள் சோழர்கள். இதுவரை அதிகம் ஆராயப்பட்டவர்களும் அதிகம் விவாதிக்கப்பட்டவர்களும் அவர்கள்தாம். சோழர்களோடு ஒப்பிடும்போது பாண்டியர்கள் பற்றி நமக்குத் தெரிந்தவை குறைவு. சேரர்கள் பற்றி ஓர் எளிய சித்திரம் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. அதிக தரவுகள் ஒரு வகை சவால் என்றால் குறைவான தரவுகள் இன்னொரு வகை சவால். இந்நூல் இரண்டையும் வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியப் பதிவுகள், ஆய்வாளர்களின் அலசல்கள் என்று பரந்து விரிந்த தரவுகளின் அடிப்படையில் இந்நூலைக் கட்டமைத்திருக்கிறார் எஸ். கிருஷ்ணன். மூவேந்தர்களின் வரலாற்றோடு தமிழகத்தின் நீண்ட, நெடிய வரலாறும் இதில் இணைந்துவருவதைக் காணலாம்.
சேரர் சோழர் பாண்டியர் – எஸ்.கிருஷ்ணன்
₹275
Extra Features
- Book will be shipped in 3 - 7 days.
- Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 0.25 kg |
---|