Description
மாபெரும் விவாதங்களின் தாயான தேசப்பிதாவின் கதையை எடுத்துரைத்தும்; அண்ணலின் ‘புத்தரா காரல் மார்க்ஸா’ ஆய்வை முன்வைத்தும் பிரேம், பிரேம்:ரமேஷ், அ.மார்க்ஸ்,ராமாநுஜம், பாவண்ணன் உடனான வாத விவாதக்களம் •”என்னுடைய சீடர்கள் என்னுடைய கதையைப் பின்னாளில் எழுதக்கூடாது. என்னைப் பற்றிப் பேசுபவர்கள் என்னுடைய சீடர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அல்லாதவர்கள் தான் நான் செய்தவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து எழுத வேண்டும் என்பது தான் என் அவா”- மோ.க.காந்தி •எனவே அவருடைய சீடரல்லா எனக்கு அவர் கதையை எழுதும் அருகதை உண்டு. மட்டுமன்றி ‘என் வாழ்க்கையே நான் வழங்கும் செய்தி’ எனச் சொல்லவல்ல மதுகை எனக்கும் உண்டு.




