Sale!

இந்தியப் பண்பாட்டில் சங்கு: தமிழகம் முதல் வங்காளம் வரை

Original price was: ₹300.Current price is: ₹250.

Add to Wishlist
Add to Wishlist

Description

தமிழ்நாட்டில், குறிப்பாகக் கொங்குப் பகுதியின் உள்மாவட்டங்களான கோயம்புத்தூர் மற்றும் சேலத்தில் மட்டுமே ஒரு காலத்தில் சங்கு வளையல் அணியும் பழக்கம் மிகவும் வலுவாகப் பின்பற்றப்பட்டது.

மற்ற எந்த மாவட்டத்தையும் விடக் கோயம்புத்தூரில் சங்கு வளையல் அணிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், இப்பழக்கத்தின் பெரும் மையமாக இம்மாவட்டம் திகழ்ந்தது. அன்றைய கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர், இந்தப் பழக்கத்தைப் பின்பற்றிய பதினொரு சமூகங்களையும் அதன் உட்பிரிவுகளையும் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்:

• பால வெள்ளாளர்கள் (Pala Vellalas)
• பூலுவர்கள் (Puluvans – புளுவ வெள்ளாளர்கள் என அழைக்கப்படுபவர்கள்)
• கொங்கு மற்றும் கொல்ல இடையர்கள் (Konga and Golla Idaiyans)
• கொங்கு நாடார்கள் (Konga Shanans)
• கொங்கு வண்ணார்கள் (Konga Vannans)
• தொட்டிச் சக்கிலியர்கள் (Thotti Chukkiliyans)
• சங்கு, கொங்கு, சங்குடு அல்லது சங்குவளைப் பறையர்கள் (Sangu, Konga, Sangudu or Sanguvalai Paraiyans)
• தொட்டிய நாயக்கர்கள் (Thottiya Naiks)
• ஒக்கிலியர்கள் (Okkilians)
• குறும்பர்கள் (Kurumbars)
• கொள்ளேகால் (Kollegal) மற்றும் கோபிசெட்டிபாளையம் (Gobichettipalaiyam) பகுதிகளில் வாழும் லம்பாடிகள்.

இந்தியப் பண்பாட்டில் சங்கு என்பது வெறும் வழிபாட்டுப் பொருள் மட்டும்தானா? அன்றாட வாழ்வில் அதன் பயன்பாட்டு முக்கியத்துவம் என்ன? எனப் பல்வேறு கோணங்களில் ஆராய்கிறது இந்நூல்.

தமிழகத்தின் கடற்பகுதிகளில் முக்குளித்து எடுக்கப்பட்ட சங்குகள், பல்லாயிரம் கிலோமீட்டர்கள் கடந்து வங்காளத்துச் சந்தைகளில் திருமண வளையல்களாக மாறிய மாபெரும் வணிக வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயரான ஜேம்ஸ் ஹார்னல் (James Hornell) இந்தியா முழுவதும் பயணம் செய்து எழுதிய மிக முக்கியமான வரலாற்று ஆவணம், இப்போது முழுமையான தமிழ் வடிவில் உங்களுக்காக வெளிவருகிறது.

நெய்தல் நிலத்தில் வேரூன்றித் தமிழகமெங்கும் கிளைவிரித்த சங்கு வணிகத்தின் வரலாற்றைத் தேடிச் செல்கிறது இந்நூல். பண்டைய தென்னிந்தியக் கடல்சார் வணிகம், நாணய முறை, மருத்துவப் பயன்பாடுகள், நாடோடிகளின் வாழ்வியல் மற்றும் சமூக வரலாறு எனப் பல ஆச்சரியமூட்டும் தகவல்களை இது தன்னுள் தாங்கி வருகிறது.

நமது வேர்களை நோக்கியப் பயணத்தின் மறக்கப்பட்ட ஓர் அத்தியாயத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சி இது. வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மரபு ஆர்வலர்களுக்கும் இதொரு அரிய பொக்கிஷம்!

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.