Category கட்டுரைகள்

மறுகால்தலை சமணர்படுகைகள் -ச.சு. நாகராஜன்

கடந்த வருடத்தின் கடைசி நாளின் மாலைப் பொழுது சமண படுக்கையில் வருடக் கடைசியிலாவது சயனிக்க எண்ணம். அதனால் நானும் தம்பி சோமேஷும் மாலை சரியாக 5 மணிக்குச் சித்த மருத்துவக் கல்லூரியை விட்டுக் கிளம்பினோம். நேரே முதல் தீர்மானம் நெல்லைச் சீமையின் சீவலபேரியை நோக்கியதாகப் பயணம். வேகப் பயணத்தை இளந்தென்றல் மட்டும் எங்களை வேவு பார்த்து…

பழந்தமிழர் துறைமுகம் முசிறி பட்டினம் பேராசிரியர். வேல்முருகன்

அமணன்’ என்கிற ஒற்றை தமிழ் சொல்லுக்குள் தமிழனின் பேரடையாளம் ஒளிந்து இருப்பதை முசிறி அகழாய்வு நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது. பண்டைய தமிழனின் நாகரீக எச்சங்கள் இன்றைய தமிழ் மண்ணில் மட்டுமின்றி உலகம் முழுக்க வியாபித்து கிடப்பதை இத்தகைய அகழாய்வுகள் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. உலக சாலைகள் எல்லாம் ரோம் நகரை நோக்கியே எனப்படும் சொலவடை போல் உலக…

பூரியின் ரதயாத்திரை – பொற்செல்வி

பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒருநாள். ஒடிசாவின் கருப்புக் கண்மணி ஜெகந்நாதரின் தேரோட்டத் திருவிழாவிற்காகப் பூரியே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. திருவிழாவைக் காண்பதற்காகப் பூரி மன்னரின் மனங்கவர்ந்த காஞ்சி இளவரசி பத்மாவதியும், மன்னரும் வந்திருக்கிறார்கள். பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் இடையே வணிகம், கலை, கலாச்சாரத் தொடர்பு கடல் வழியாக இருந்திருக்கிறது. அடுத்து திருமணமும் நடக்கவிருக்கிறது என்பதால் ஊரே…

சதீ – பிரதிக் முரளி (ஆய்வு மாணவர்)

பொய்கையும் தீயும் ஓரற்றே ! “பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே ! போற்றுவோம் இஃதை எமக்கில்லை ஈடே” என்று போற்றி பாட்டிசைத்த பாரதியின் பாரதம் கடந்து வந்த பல கோடி ஆண்டு வரலாறு வியக்கத்தக்கது. பற்பல பொற்காலம் கடந்தும், சமூக அவலங்கள் களைந்தும், தன் மக்களை பேணி அரவணைக்கிறாள் பாரத அன்னை. “களையப்பட்டுவிட்டனவே” என்ற ஒரே…

ஜம்முவில் தேடல் 1 – Ar. ரா. வித்யாலட்சுமி

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், வெவ்வேறு விதமான கட்டிடக்கலையிலை நம்மால் பார்க்க முடிகிறது. அந்தந்த ஊரின் தட்பவெப்ப அமைப்பும், புவியியல் அமைப்பும், கிடைக்கும் பொருட்களும், வந்து செல்லும் வணிகர்களும், உள்ளூர் கலைஞர்களும், பொருளாதார நிலையும், அரசர்களின் ஆர்வமும் கட்டிடகலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் ஒரு வகையில் கட்டப்படும் கோவிலோ, வீடோ, கேரளத்தில் வேறு விதத்திலும்,…

தேயிலை உற்பத்தியும் தெய்வ உருவாக்கமும் – எம்.எம். ஜெயசீலன்

நாட்டார் தெய்வங்கள் மக்கள் வாழ்வுடன் இரண்டறக் கலந்தவையாகும். அத்தெய்வங்களின் தோற்றமும் வடிவமும் குணமும் அவை தோன்றிய சமூகம் சார்ந்தவையாகவே விளங்குகின்றன. தெய்வங்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்த பலரும் அச்சமும் உணவுத்தேவையுமே ஆதி மனிதனின் கடவுள் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தன என்று கூறுகின்றனர். அதனால் மனிதனின் உற்பத்திமுறைக்கும் கடவுளருக்கும் இடையே நெருக்கமான உறவு காணப்படுவதுடன் ஒவ்வொரு சமூகத்தினரின்…

திருவள்ளூர் மாவட்டக் கோயில்கள் – 2 – பெ. தாமரை

எங்களது திருக்கோயில்கள் உலாவின் இரண்டாவது தவனையில் நாங்கள் மேலும் சில திருவள்ளூர் மாவட்டக் கோயில்களைத் தரிசித்தோம்.   ஞாயிறு கோயில்: பொன்னேரி வட்டம், ’ஞாயிறு’ என்னும் இடத்தில் அமைந்துள்ளது புஷ்பரதேஸ்வரர் கோயில் (ஞாயிறு கோயில்). செங்குன்றத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், பொன்னேரியிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது இது. கோயிலுக்குச் செல்லப் பேருந்து வசதி உள்ளது.…

வேலூரின் காதல் சின்னம்! – சரவணன்இராஜா

வேலூர் மாவட்டம் முழுவதும் வரலாற்று சின்னங்கள் பரவிகிடைக்கின்றன, அதில் ஒரு காலத்தில் தலைநகராக இருந்த ஊர் ஆற்காடு.கி.பி.1692ல் மொகலாய பேரரசர் அவுரங்கசீப் தென்னிந்தியாவில் தனது ஆட்சியை விரிவுபடுத்ததன் சிறந்த தளபதிகளை தேர்வுசெய்து, வரிவவல் செய்யும் அதிகாரம்மிக்க படைதலைவர்களாக அனுப்பபட்டவர்களே நவாப்புகள், அவ்வாறு முதலாவதாக வந்த சுல்பிக்கார் அலி என்பவர் விஜயநகர் மற்றும் மராட்டிய அரசுகளை முறியடித்து…

இருளுக்குள் பாயும் கீழடி வெளிச்சம் – சிராப்பள்ளி மாதேவன்

  இலக்கியத் தேடல்கள் வரலாற்றை நோக்கியும், வரலாற்றுத் தேடல்கள் இலக்கியங்களை நோக்கியும் திருப்பும் இயல்பு கொண்டவை. அந்த இயல்பை மறுதலித்தே இங்கு நீண்ட காலமாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. இரண்டையும் இணைத்துக் கொண்டவை மிகச்சிலவே. இந்த இரண்டுக்குமான இடைவெளியை அகழ்வாய்விலும் தொல்பொருள் ஆய்விலும் கிடைக்கும் தரவுகளின் துணைகொண்டு சரிசெய்து கொண்டே வரவேண்டும்.…

அன்பே இறைவழிபாடு கண்ணப்ப நாயனார் கதை – ரா. வித்யாலட்சுமி

நான் மிக அதிகமாய் நேசிக்கும், வியக்கும் நாயன்மார்களில் ஒருவர் கண்ணப்ப நாயனார். அவருக்குப் பரிட்சியம் இல்லாத ஒரு அன்பை, ஒரு இறையை மனம் முழுக்க நிறைத்துக்கொண்டு முழு மனத்துடன் அவரைச் சரணடைந்து அந்தப் பதவியைப் பெற்றிருக்கிறார். சரி அவர் எப்படி நாயன்மார்களில் ஒருவரானார்? பொத்தப்பி என்ற நாட்டில் வேடர்களின் தலைவன் நாகனும், அவன் மனைவி தத்தையும்…