Category கட்டுரைகள்

விஜயநகர நாயக்கர்கள் கன்னடரா தெலுங்கர்களா?

வீர வல்லாளனுக்கு விஜய வல்லாளன் என்ற மகன் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிடும் சில அறிஞர்கள், ஹரிஹரனுடைய பாட்டன் புக்கராயலு உடையார். பொயு 1314ல் காகதீய அரசில் குறுநில மன்னனாக இருந்ததைக் குறிப்பிட்டு, அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்களே என்று அறுதியிட்டுக் கூறுகின்றனர். கம்பிலி நகரம் துக்ளக்கிடம் சென்றபோது இவர்கள் இருவரும் அங்கே பணியமர்த்தப்பட்டனர்…

கயத்தாறு இயற்கை அமைப்பு

தமிழகத்தின் கோயில் நகரம் என மதுரை மாநகர் அழைக்கப்படுகிறது. ஆனால் கோயில்களின் நகரம் எனக் கயத்தாறு மாநகரைச் சொல்லலாம். ஏனெனில் ஒரே ஊரில் இத்தனை கோயில்கள் இருப்பது கயத்தாறன்றி தமிழகத்தில் வேறெங்கும் காண இயலாத ஒன்று. ஆகவே கயத்தாறு ஓர் புண்ணிய பூமி. இந்நகருக்கு வந்து செல்லுதல் என்பது ஏதோ ஒரு வகையில் ஆலய தரிசனத்திற்கு…

இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள்

இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள் : ஈராயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள தமிழக வரலாற்றில் மகோன்னதமாக விளங்கியது சோழப் பெருமன்னர்களின் ஆட்சி. அவர்களது ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் இமயத்தை எட்டியது போல் உயர்ந்து நின்றது. அவர்கள் ஆட்சி கலைகளிலே கட்டட வல்லமையிலே, இசையிலே, நாட்டியத்திலே, ஓவியத்திலே, இலக்கியத்திலே, வேளான்குடிச் செம்மையிலே, பொருளாதாரத்திலே, வெளி நாட்டுத்…

ஓங்கோலில் பண்டையத் தமிழர்கள்

ஓங்கோல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பள்ளியில் காகத்தியர் காலத்து 14 ஆம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு நிலம் கொடை ஒன்றை பற்றி பேசுகிறது. மோட்டுபள்ளி என்பது இடைக்காலத்தின் சர்வதேச துறைமுகமாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் இ சிவ நாகி ரெட்டி, “காகத்தியர்கள் தெலுங்குடன் கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழில் கல்வெட்டுகளையும்…

ஆங்கிலேயரும் காவல்துறை மறுசீரமைப்பு

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் காவல் நிர்வாகம் காவல்காரர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணிபுரிந்த தலையாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தலையாரிகளும், காவல்காரர்களும், பொறுப்பாளிகள் ஆவர். ஏனைய தென்மாவட்டங்களிலும் இத்தகைய காவல்முறை வழக்கில் இருந்தது. காவல்காரர்கள் மற்றும் தலையாரிகளுக்கு நிலக் கொடைகள் அல்லது நிலச்சுங்கவரி வருவாயின் ஒரு பகுதி, விவசாய உற்பத்தியில் ஒரு…

கோவில் ஆய்வின் வகைகள்

தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்களாகத் திகழும் கோயில்களைப் பற்றிய ஆய்வுகள் அதிக அளவில் நிகழ்த்தப்படல் வேண்டும். அத்தகைய ஆய்வுகளின் வாயிலாகக் கோயிற்கலைகளில் பொதிந்து கிடக்கும் அழகியல் கூறுகள், அக்காலச் சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துக் கூறுகளையும் முழுமையாக அறிய இயலும்.   இவைதவிரக் கோயிற் கட்டடக்கலை அமைப்பு முறைகள், சிற்பங்களின் அமைப்பு முறைகள்,…

சோழன் செங்கணான் – தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால்

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால் சோழன் செங்கணான்: பழந்தமிழ் இலக்கியம் என்னும்போது அது பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவைகளையே பொதுவாக உணர்த்தும். பதினெண் கீழ்க்கணக்கு என்ற தொகையில் அடங்கிய பதினெட்டு சிறுநூல்களுள் ஒன்றான “களவழி நாற்பது’ என்னும் நூலின் இறுதியில், “சோழன் செங்கணானும் சேரமான் கணைக்கால்…

அழிந்த சோழர் கட்டிய கல்லணையை மீட்ட தஞ்சை நாயக்கர்கள்

சோழருக்கு பிறகு காவிரியின் குறுக்கே அமைந்த கல்லணை தஞ்சையில் விஜயநகர நாயக்கரான செவ்வப்ப நாயக்கர் காலத்தில் மறு சீரமைக்கப்பட்டன என்கின்றனர் ஆய்வாளர்கள். காவிரியின் கரையோரங்களில் பல படித்துறை மற்றும் நீராழி மண்டபங்களும் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டன. காவிரி நதியின்‌ பயன்பாட்டை நன்குணர்ந்த அச்சுதப்ப நாயக்கர் காவிரி நதியின்‌ கரைகளில்‌ ஆங்காங்கே படித்துறைகளையும்‌, மண்டபங்களையும்‌ அமைத்து மக்களுக்குச…

காஞ்சிபுரத்தின் வரலாறு – சங்க காலம் முதல் பல்லவர் காலம் வரை

சங்க காலத் தமிழக வரலாற்றினை அறிவதற்குத் துணை நிற்பவை சங்க இலக்கியங்களாகும். பாண்டியர் தலைநகரான மதுரையைச் சங்க இலக்கியங்கள் மதுரை, கூடல் என்ற இருபெயர் களால் சுட்டுகின்றன. அதுபோல் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியைச் சங்க இலக்கியங்கள் காஞ்சி, கச்சி என்ற இரு பெயர்களால் குறிப்பிடுகின்றன. காஞ்சி, காஞ்சிபுரம், கஞ்சி, கஞ்சிபுரம், காஞ்சீ, காஞ்சீபுரம், காஞ்சி…

தென் தமிழ்நாட்டில் உருக்கு ஆலை – கோட்டாறின் கதை

இயற்கையாகவே திருவிதாங்கூர், குறிப்பாகத் தென் திருவிதாங்கூர் தாது வளங்களுக்குப் பெயர் பெற்றதாகும். கன்னியாகுமரியிலும் மணவாளக்குறிச்சியிலும் உள்ள கடற்கரையில் படிந்துள்ள கனரக இயற்கைத் தாதுக்களாகிய மானோசைட் (Manosite), இல்மெனைட் (Ilmenite), ரூட்டில் (Rutile), சிற்கோம்ப் (Zircomb), ទាល់ीम (Sillimanite), शाल (Garnet) ஆகியவை உலகப் புகழ்பெற்றவையாகும். கன்னியாகுமரிக்கு அருகில் கிடைக்கும் சிப்பி வகைகள் பொதுவாக வீடு கட்டுவதற்கு…