Category கட்டுரைகள்

கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்

ஆகமங்கள்: சமஸ்கிருதத்தில், ஆகமம் என்பதற்கு அறிவை வளர்த்துக்கொள்ளுதல் என்று ஒரு பொருள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. ஆகமங்கள், வேதத்தின் ஒரு பகுதியோ அல்லது வேதத்திலிருந்து பெறப்பட்டவையோ அல்ல. இறைவனுக்காக கட்டப்படும் கோயிலின் அமைப்பு, வழிபாட்டு முறைகள், சடங்குகள் இவற்றைக் குறிப்பவையே.வழிபடும்போது சில வேதமந்திரங்களையும் உச்சரிப்பது என்ற நடைமுறை ஏற்பட்டுள்ளது என்பதால் ஆகமங்களும் வேதங்களைப் போன்றதே எனச்…

பல் யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி

பல்யானைச் செல்கெழு குட்டுவன் குடநாட்டின்கண் மாந்தை நகர்க்கண் இருந்து இமயவரம்பன் ஆட்சி புரிந்து வருகையில் குட்ட நாட்டில் வஞ்சி நகர்க்கண் இருந்து பல் யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி செய்து வந்தான். இக்குட்டுவன் இமயவரம்பனுக்கு இளையனாதலின், இளமை வளத்தால் இவன் போர்ப்புகழ் பெறுவதில் தணியா வேட்கையுடையவனாயிருந்தான். குட்ட நாட்டுக்குக் கிழக்கில் தென்மலைத் தொடரின் மேற்கில் பரந்திருக்கும்…

சட்டிச் சோற்றின் வரலாறு

அந்தணர்க்கு அளித்தலும் அறவோரைப் பேணுவதும் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய பண்பாக சங்க காலத்திலிருந்து இருந்து வரு கின்றது. பிற்காலச் சோழர், பாண்டியர் காலங்களிலும் இப்பண்பாடு தொடர்ந்து வந்திருப்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. நாடெங்கும் இருந்த கோயில்களில் முக்கிய நாட்களிலும் திருவிழாக் காலங்களிலும் அந்தணர்க்கும் துறவியருக்கும் உணவு வழங்கப் பலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. யாத்திரிகராய் வரும் துறவியருக்குத் தங்க…

கொங்கு நாடு ஒரு தனி நாடு

கொங்கு நாடு பன்னெடுங் காலமாகவே ஒரு தனி நாடாகவே வழங்கப்பெற்று வந்திருக்கிறது. தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர் ஆண்டனர் என்றாலும் கொங்கு நாடு ஒரு தனி நாடாகவே இருந்து வந்திருக்கிறது. மூவேந்தர்கள் அவ்வப்போது கொங்கு நாட்டைக் கைப்பற்றினாலும், இதனை ஒரு தனி நாடாகக் கொண்டு, தனிப் பிரதிநிதிகளை நியமித்து ஆட்சி செலுத்தி வந்தனர். சங்க இலக்கியங்களும்…

அழிந்து போன இராஜராஜ சோழனின் நாடகம்

அழிந்து போன இராஜராஜ சோழனின் நாடகம் : கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சீவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கின்றது என்று கூறியுள்ளது காணத்தகும் : “இளைமையங் கழனிச் சாயம் ஏறுழு தெரிபொன் வேலி வளைமுயங் குருவ மென்றோள் வரம்புபோய் – வனப்பு வித்திக் கிளைநரம் (பு) இசையும் கூத்தும் கேழ்த்தெழுந் தீன்றகாம விளைபயன் இனிதின்…

இந்தியாவில் சாதி நிலம் மற்றும் நில உடமை

தீபகற்ப இந்தியாவில் சாதவாகனரும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட சங்கத் தமிழரும் பண்டைய வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஏனையோர், திணை என்ற சூழியத் தொகுதியில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வேட்டைக்காரர்கள், ஆடுமாடு மேய்ப்போர், வழிப்பறிக் கொள்ளையர், மீனவர் மற்றும் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆவர். இவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி செய்து கொண்டு வாழ்ந்தவர்கள்.…

ஆசீவகர்கள் யார்?

இந்தியாவில் ஆரியரின் வருகையினால் தோன்றிய வேதங்களையும், அவற்றைத் தழுவி நிற்போரையும் எதிர்த்துச் சில மதங்கள் தோன்றின. அவற்றுள் சார்வாகர்கள், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் ஒரு தனிக் கடவுளையோ,அன்றேல் அக்கடவுளின் ஏற்றத்தையோ நம்பாதவர்கள். வேதங்கள் கூறும் சமயச் சடங்குகள் மக்களை உய்விக்க முடியாது என இவர்கள் நம்பினர். எனவே, வேத நெறி தழுவாத, வேதத்தை…

இலமூரியா உண்மையா? ஒரு தேடலும் ஐயமும்

கடல்கோளால் அழிந்த இலமூரியா என்ற குமரிகண்ட பற்றி கருதுகோள் நம்மிடையே உண்டு. ஒரு காலத்தில் கிழக்காசிய நாடுகள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இணைந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களின் விளைவாக கடல்நீரின் மட்டம் உயர்ந்து, அந்த நிலப்பகுதி பல தனித்தனி தீவுகளாகப் பிரிந்து விட்டது என்றும் நம்பப்படுகிறது. ஆப்பிரிக்காவில் தோன்றிய தொல்மாந்தரினமானது, இப்படியாக…

பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும்

கல்வெட்டுகளில் தட்டாரும் தச்சரும் ஆசாரி, ஆசாரியன் என்ற பட்டங்களைப் பெற்றவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். கற்பணி செய்யும்தச்சர்கள் பலரைக்கல்வெட்டுகளில்காணமுடிகின்றது. இவர்கள் சிற்பாச்சாரியர்,தச்சாசாரியன்” என்று அழைக்கப்பட்டனர். எல்லா வகை ஊர்களுக்கென்றும் அவ்வூர்களில் இருந்த கோயில்களுக்கென்றும் தனித்தனியாகப் பல சிற்பாசிரியர்கள் இருந்திருக்கின்றனர்.ஊரார் செய்த முடிவுகளையும் அரச ஆணைகளையும் கோயில் சுவர்களில் கல்வெட்டாகப் பொறிக்கும் பணியினையும் கோயிலில் கட்டடப் பணிகளையும் 200 நாட்டில்…

செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர்

செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர் : தமிழகத்தில் பக்திமார்க்க அடிப்படையில் சைவ சமயம் தழைத்தோங்க நாயன்மார்களும், வைணவம் செழிக்க ஆழ்வார்களும் அரும்பாடுபட்டுள்ளனர். சைவ சமயத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார்களும், முக்கியமானவர்களாவர். இச்சமயச் சான்றோர்களுக்கு மக்கள் சிறுக்கோயில்கள் கட்டியும், சிற்பங்கள் உருவாக்கியும் வழிபாடு நடத்தியுள்ளனர். சோழர் காலத்திலேயே அப்பர், சுந்தரர், சம்பந்தர்…