Category கட்டுரைகள்

சோழர் ஆட்சியில் அறப் போராட்டங்கள்

தமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி.846ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய நாட்டையும் போரில் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள். அதற்குப் பின் பட்டம் பெற்ற அரிஞ்செயன், சிங்கள…

பெண்களே முதல் உழவர் – பெண்கள் கொண்டாடும் பொங்கல் விழா

உலக வரலாற்று அறிஞர்கள் பெண்களே முதன் முதலில் விவசாயத்தைக் கண்டறிந்தனர் என்கிறனர். அதனை சங்க இலக்கியமும் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அதுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று…

தமிழகத்தில் சமணப் படுக்கைகள் – தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை

சமண சமயத்தினைச் சார்ந்தவர்களுக்குப் படுக்கைகள் அமைத்துக் கொடுக்கின்ற வழக்கத்தை அன்று இருந்த அரசர்கள் மற்றும் சில சமய ஆதரவாளர்கள் மேற்கொண்டு வந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடைமுறை தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளது. ஜம்பை பகுதியில் ‘அதியமான் நெடுமான் அஞ்சி’ சமண முனிவர்கள் தங்குவதற்காக சமணப் படுக்கையினை அமைத்துக் கொடுத்தது பற்றி அங்குள்ள கல்வெட்டு ஒன்று…

சபரிமலை யாத்திரையின் தோற்றமும் வளர்ச்சியும்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தில், ஐயப்பன் வழிபாடும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடும், தமிழ் மக்களின் சமய ஒழுகலாறுகளில் ஒருவகையான கட்டுக்கோப்பான (militancy) பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அண்மைக் காலங்களில், பெருவாரியான மக்கள் பங்கேற்கிற இந்த இரண்டும், அடிப்படையில் வைதீக /ஆகமநெறி சார்ந்தவை அல்ல. இரண்டிலுமே பிராமணர்களின் பங்கேற்பு மிக மிகக் குறைவேயாகும். ஐயப்பன் வழிபாடு. கிராமங்களை விடச் சிறு…

கொங்கு நாட்டுப்புற வழக்காறுகள்

அள்ளக்கயிறு (ம) வடக்கயிறு விளக்கம் : அள்ளையில் கயிறு கட்டப்படுவதால் இது அள்ளக்கயிறு என அழைக்கப்படுகின்றது. இது மரம் ஏறும்பொழுது இடுப்புப் பகுதியில் அணிவதால் இடுப்புக்கயிறு என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு கொட்லா என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு என்பது முட்டை வடிவில் நீள வட்ட அமைப்பு உடையது. அள்ளக்கயிறு என்பது நீளமாக, மிகவும் வலிமையானதாக இருக்கும். பெரும்பாலும்…

அர்த்தசாஸ்திரம்: உலகின் முதல் பொருளாதார நூல்

அர்த்தசாஸ்திரம் என்பது என்ன? அதன் பெயரிலிருந்து, அர்த்தசாஸ்திரம் என்பது பொருளாதார நிறு வனங்களைப்பற்றிய நூல் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அது பாதி உண்மை மட்டுமே. அர்த்தசாஸ்திரம் ஆட்சிமுறைகளைப்பற்றிய அறிவையும் ஒரு நாட்டை எவ்வாறு வழிநடத்தலாம் என்ற ஆலோ சனைகளையும் தரக்கூடியது. குறிப்பாக முடியாட்சிபற்றி அது விரிவாக எடுத்துரைக்கிறது. செல்வத்தையும் அது அரசாட்சியுடன் அடையாளப் படுத்துகிறது.…

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை

“போகிப் பண்டிகைக்கு மறுநாளாகிய தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகை என்றும், சங்கறாந்திப் பண்டிகை என்றும் கொண்டாடி வருகின்றார்கள். சங்கறாந்தியாகிய பொங்கல் பண்டிகையும் பகவான் புத்தருக்காக கொண்டாடப் படும் பண்டிகையேயாகும். சங்கறாந்தி என்ற சொல்லை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள வரலாற்று உண்மை நன்கு விளங்கும். சங்கறாந்தி என்பதை, சங்கறர் + அந்தி =சங்கறாந்தி என்று…

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை : போகிப் பண்டிகைக்கு மறுநாளாகிய தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகை என்றும், சங்கறாந்திப் பண்டிகை என்றும் கொண்டாடி வருகின்றார்கள். சங்கறாந்தியாகிய பொங்கல் பண்டிகையும் பகவான் புத்தருக்காக கொண்டாடப் படும் பண்டிகையேயாகும். சங்கறாந்தி என்ற சொல்லை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள வரலாற்று உண்மை நன்கு விளங்கும். சங்கறாந்தி என்பதை,…

தமிழகத்தின் ராபீன் ஹூட்டுக்கள் – மக்களைக் கவர்ந்த சமூகம்சார் கொள்ளையர்கள

சமூகச் சூழலாலும் – சமூகக் கொடுமையாலும் கொள்ளையராக மாறியவர்களில் சிலர், தங்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சுரண்டும் வர்க்கத்துடன் பகையுணர்வும், தம்மை பொத்த நடுத்தர்கள் நிலக்களிடம் நட்புணர்வும் கொண்டிருந்தனர். இதனால் கையூட்டுப் பெற்று வளன் பட்டிக்குப் பணம் கொடுப் பவர்கள், கை ஆட்சிப் பெற்று வளம் படைத்தவருக்கு ஆதரவாகப் செயல்படும் அரசு அதிகாசொள் ஆகியோரிடம் கொள்ளையாகத் பதுடன்…

பொட்டுக்கட்டு திருமணம் என்றால் என்ன?

தமிழகத்தில் தேவதாசிகள் பற்றி பல அறிய வரலாற்று தகவல்களைக்கூறும் இந்நூலில், பொட்டுக்கட்டு திருமணம் எவ்வாறு நடைபெற்றது என்பதை முனைவர் கே. சாதாசிவம், “தேவதாசிகளிடையே ‘பொட்டுக் கட்டுதல்’ என்று பிரபலமாக அறியப்பட்டுள்ள மரபு ஒன்று உண்டு. கோயிற் சேவைக்கெனத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வோர் பின்பற்றிய இந்த வெகுமக்கள் வழிமுறையின் மீது இந்தக் காலகட்டத்தின் ஏராளமான தரவுகள் வெளிச்சம்…