Category கட்டுரைகள்

காஞ்சியில் கைத்தறி தொழிலை வளர்த்த பாண்டியன் கல்வெட்டு

காஞ்சிபுரம் என்றாலே பட்டுத்தறிக்கு பெயர்பெற்றது. காஞ்சி நகரம் மட்டுமல்ல இம்மாவட்டம் முழுவதும் நெசவுதொழில்தான் முதன்மையான தொழிலாக இருந்துள்ளதற்கான தடயம் கல்வெட்டு வாயிலாகக் கிடைத்துள்ளது.  தாம்பரம் அருகே உள்ள படப்பை என்ற கிராமம். தற்பொழுது முக்கிய போக்குவரத்து வழித்தடமாகவும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும் இவ்வூர் மிக பழமையானது. அது மட்டுமல்ல நெசவுதான் முக்கியமான தொழில். தற்போது…

தமிழரின் பண்பாடு பழக்கவழக்கமும் இன்றைய தாக்கமும்

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் உலகிற்கு முன்னுதாரணம். தமிழர்   சிறப்பான பண்பாட்டைப் பின்பற்றியுள்ளனர். அறிவியல்அறிந்திராத பழங்காலத்தில் எல்லா முறைகளுமே அறிவியலுடன் சம்பந்தப்பட்டே இருப்பது ஆச்சரித்தை அளிக்கிறது. பண்பாடு கலாச்சாரம் எனில்  உடையுடுத்துவதிலும், உணவு உண்ணுவதிலும் இருக்கிறது என நாம் நினைக்கிறோம். விளையாட்டு, தெய்வங்களைக் கும்பிடுவது, நம்பிக்கை, தமிழில் சொல்லப்படாத வாழ்வியல் செய்திகளே இல்லை என்னும் அளவிற்கு ஏராளமான செய்திகள்…

மரபுக் கட்டடக்கலைஞன் 1 (தொடர்)

உலக சூழலியல் தினத்தில், கட்டிடக்கலை நிபுணர்  கிருத்திகா உடன் இருந்த உரையாடல் மிக அழகானதாகவும்,  அனுபவங்களைப் பகிரப்பட்ட ஒரு தளமாகவும் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த தேடல்களுக்கான விஷயமாகவும் இருந்தது.  அதிலிருந்தே இந்தக் கட்டுரை ஆரம்பிக்கிறது, நம்மை சுற்றி பலவிதமான கட்டிடக் கலைஞர்கள் உள்ளபோதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கட்டிடங்கள் மிகுந்த ஈர்ப்பையும் அதன்பால் ஒரு…

பல்லான் குன்றில் குழுமூர் உதியன் – சேரர் ஆயிரம்

அளவில்லாத அன்னதானம் அளித்த பல்லான் குன்றில் குழுமூர் உதியன் பல்லான் குன்றில் குழுமூர் உதியன் என்றவன் உதியன் வழிவந்த சிற்றரசனாக இருந்தாலும் “தானத்தில் அளவில்லாது கொடுத்த சிறப்புடைய அரசன் ஆவான்” என்று, கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் மாங்கோதை 168ஆம் பாடலில் குறிப்பாக இவனின் அன்னதான சிறப்பை மையப்படுத்தி புகழ்ந்து பாடுவதை நாம் பார்க்கிறோம். இவன் சேரமான் மாங்கோதை காலத்தில் வாழ்ந்தவனாக இருக்கவேண்டும் இல்லை அதற்கு முன் வாழ்ந்தவனாக இருக்க வேண்டும். ஒருவன் விளைநிலமும் கறவைப் பசுவும் இருந்தால்…

பண்டையத் தமிழக துறைமுகங்களும், அவற்றின் இன்றைய நிலையும்

“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது முன்னோர் வாக்கு. சமூகம் வளர்ச்சியடைய  வாணிகத் தொடர்புகள் அவசியம்.  தமிழர்கள் புதிது புதிதாக கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள். மேற்கே கீரீஸ், ரோம் முதல் எகிப்து, சீனம் வரையில் கடலோடியப்பிழைப்பு நடத்தினர். மேலும் பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா ஆகிய நாடுகளுடன் வாணிகத்தொடர்பில் இருந்தனர். ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ,பொன், வெள்ளி,…

சோழர் கால நீர் மேலாண்மை – சோழர் 1000

              தமிழ்நாட்டை ஆண்ட  அரசுகளுள் மிகவும் பெருமைமிக்க பேரரசாகக் கருதப்படுவது சோழப்பேரரசு ஆகும். கி.பி 8-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சிபுரிந்த சோழர்கள் கலை, கட்டடக்கலை, நிர்வாகம் மற்றும் வணிகம் எனப் பலவகையில் சிறந்து விளங்கினர்.     விசயாலயன் காலத்திலிருந்து சோழர்கள் வளர்ச்சி தொடங்கினாலும்…

சேரர் இமயவரம்பன் – ஜெயஸ்ரீ

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர்……” என்ற காரிகிழார் பாட்டின் வழி அறிய முடியும், நம் தமிழ்நாட்டு மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னன் இமயவரம்பன் என்ற ஒருவன் முடிசூடி அரசாண்டவன் . இமயம் வரை சென்று தன் கொடியை நாட்டிய தால்தான் இப்பெயர்…

பல்லவர் காலச் சிற்பக்கலைகள் – சிறு பார்வை – M. ஆயிஷா

சிற்பக்கலை சங்ககாலத்தில் இருந்தே செழித்து வளர்ந்த ஒரு கலையாகும். சுங்க காலத்தில் சிற்பங்கள் மண்ணாலும், மரத்தாலும், தந்தத்தாலும் உருவாக்கப்பட்டன. மண் சிற்பக்கலைஞார்கள் “மண்ணீட்டாளார்கள்” என்று அழைக்கப்பட்டனர். சுடுமண்ணாலும் மரத்தாலும் சிற்பங்கள் செய்யப்பட்டபிறகு கருங்கற்களில் உருவங்கள் செய்யப்பட்டன. இவற்றை “நடுக்கற்கள்” என்று கூறுவார்கள் போல் உயிர்நீத்த வீரார்களுக்காகவோ, உடன்கட்டை ஏறும் பெண்களுக்காகவோ வைக்கப்பட்டன. இத்தகைய நடுக்கற்களை பல்வேறு…

வழிபாடு சடங்கு முறைகளில் ஆரிய, சமண, பௌத்தக்கலப்பு

பழங்காலத் தமிழர்கள் இயற்கையை இறைவனாக் கருதினர். இயற்கையை வழிபட்டால், அவை தங்களைப் பாதுகாப்பவை, என்று எண்ணியே இயற்கையை வழிபட்டனர். அவ்வாறு வழிபட்ட தெய்வங்கள் பின்னாளில், ஆரியரின் வருகைக்குப் பின்னர்ப் பலப் பல கட்டுக் கதைகளுடன் தமிழ் மரபில் சேர்ந்து, தனித்தமிழ் மரபு எது என்று தெரியாத அளவிற்குக் கலந்து விட்டது என்பதே உண்மை. பொய்யை ஆவணப்படுத்தினால்…