Category கட்டுரைகள்

சங்ககால பூதமும் துளு நாடும்

சங்க காலத்திலே பூதம் என்னும் தெய்வ வணக்கம் இருந்ததை அறிகிறோம். பதிற்றுப்பத்து. சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பூதவணக்கம் கூறப்படுகிறது. அந்தப் ‘பூதங்கள்’ திருமால், சிவன் போன்ற உயர்ந்த தெய்வங்களைப் போன்ற நிலையில் இல்லாவிட்டாலும் இந்திரன், முருகன் போன்ற உயர்ந்த நிலையில் வைத்து வணங்கப்பட்டன. பிற்காலத்தில் பூதம் என்பதற்குக் கொடிய துர்த்தேவதை, சிறுதேவதை என்னும் பொருள்…

சீதைக்கு சாபம் விடுத்த இலட்சுமணன்

அத்யாத்ம ராமாயணத்தில் இறக்கும் தறுவாயில் மாரீசனாகிய மாயமான் விடுத்த அபயக்குரலைக் கேட்ட சீதை இலக்குவனை நோக்கி, ‘இலக்கு வனே, இராமனின் அபயக் குரல் உனக்குக் கேட்கவில்லையா? உடனே அவனுடைய உதவிக்கு விரைந்து செல்’ என்று கூறினாள். அதைக் கேட்ட இலக்குவன், ‘அது இராமன் குரல் அல்ல; இறக்கும் நிலையில் கதறிய யாரோ ஒரு அரக்கன் குரல்.…

முன்னாள் வலையல் வியாபாரிகளான லம்பாடியர்

சிந்துசமவெளியையும் தமிழகத்தையும் இணைத்த ஓர் குழு. தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலைகளின் அடிவாரங்களில் வாழும் லம்பாடியர் எனும் மலையின மக்கள் 30 குடிகள், 15 குடிகள் என வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தளி, பென்னாகரம் ஆகிய இடங்களிலும், பெரியார் மாவட்டத்தில் நாயக்கர் தண்டா, (போமியா தண்டா) தேவலாந்தண்டா, புதுத்தண்டா, புருவந்தண்டா…

கண்ணகி திராவிட தெய்வமா?

நூலின் ஆசிரியர் கூறுகையில், “இந்து சமயத்தில் ஆரிய சமயத்தில் பெண் தெய்வத்திற்குக் கொடுக்கப்படுகிற உயர்வை விட திராவிடச் சமயத்தில் உள்ள பெண் தெய்வத்திற்குத்தான் ஏற்றம் மிகுதியாகக் கொடுக்கப்பட்டு இருந்தது; இன்றும் இருந்து வருகிறது. திராவிடர்களுடைய மொழியில் வடமொழி புகுந்து ஆதிக்கம் செலுத்திய காலத்தில், ஆரியர்களின் பண்பாட்டில் திராவிடர்களின் பண்பாடு கலந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இந்தச்…

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

நம்பமுடியாத புலமையாளர் தமிழ்நாட்டில் அறியப்பட்டவர்களைப் போல் அறியப்படாத பெரிய அறிஞர்களின் பட்டியல் ஒன்றும் இருக்கிறது. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, சி.சு.மணி. தொல்காப்பியம் உயிர்ஈற்றுப் புணரியலைப் பற்றிப் பேசவேண்டுமா? சங்க இலக்கியத்தின் பிசிராந்தையார் நட்பினைப் பற்றிப் பேசவேண்டுமா? பரிமேலழகர் உரைச் சிறப்பு என்ன? தமிழிலக்கிய நெடும் பரப்பில் எங்கே எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய…

தமிழர் சமயம்

உலகத்தில் மதங்களுக்குப் பெயர் வழிபடும் தெய்வத்தை வைத்தாவது, சமயத் தலைவன் பெயரைத் தழுவியாவது, பிரமாண நூல்களைப் பொறுத்தாவது அமைவதேயன்றி மக்களினத்தின் பெயரால் அமைவதில்லை. வழிபடுங்கடவுளின் பெயர் சிவமாயின் அம்மதம் சைவமெனப்படும், தெய்வத்தின் பெயர் விஷ்ணுவாயின் மதம் வைணவம் எனப்படும். கிறிஸ்து மதமும் மகம்மதிய மதமும் புத்தமதமும் சைனமதமும் சமயத்தலைவர்கள் பெயரால் ஏற்பட்டவை. செராஸ்டிரிய மதமும் கன்பூசிய…

மலையின மக்கள் அல்லது பழங்குடியினர் ஆய்வு மையங்கள்

மலையின மக்கள் அல்லது பழங்குடியினர் ஆய்வு மையங்கள் : இந்தியாவின் பழமையின் சிறப்புகளைப் பாதுகாக்கவும் வளர்ச்சியடையாத பகுதிகளை இனங்கண்டு மேன்மைப்படுத்தவும் பழங்குடியினரின் கல்வி, பொருளாதார திட்டங்களை நடத்து வதற்கும் புதிய நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. பீகார் மலையின மக்கள் மேம்பாட்டு நிறுவனம், வங்காளத்தில் உள்ள பண்பாட்டு ஆய்வு நிறுவனம் ஆகிய இரண்டும் முறையே 1954, 1955-…

செஞ்சி நாயக்கர் வரலாறும் கலைகளும்

செஞ்சி நாயக்கர் கலைப்பணி : தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர்களைத் தொடர்ந்து கட்டடக் கலை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்கள் விஜயநகர நாயக்கர்களாவர். கோயில் வளாகத்தின் முக்கியமான கூறுகளாக விமானம், மண்டபங்கள், பிரகாரங்கள், கோபுரம், தெப்பக் குளங்கள் முதலியவற்றைக் கூறலாம். தமிழகத்துக் கோயில் விமானம் என்பது பொதுவாக ஆறு அங்கங்களைக் கொண்டிருக்கும். எனவே அது “ஷடங்க”…

களப்பிரர் தமிழுக்கு எதிரியா? வரலாறு கூறும் தகவல்கள்

தனிப்பட்ட எதிரியை ஊரார் எதிரியாக மாற்றும் உளவியலே இது. “சங்க காலத்திற்குப் பின்பு நீண்ட இருண்ட காலம் தொடர்கிறது. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான இக் காலத்திய நிகழ்வுகளை அறிவது கடினமே. ஆனால், ஆறாம் நூற்றாண்டளவில் அடுத்த காட்சிக்காகத் திரை விலகும்போது, பண்பாட்டின் எதிரிகளாகச் செயல்பட்டுள்ள களப்பிரர் எனும் தீய அரசர்கள், தமிழ்நாட்டில் நிலைபெற்றிருந்த அரசுகளை அகற்றித்…