தமிழகக் கோபுரக்கலை மரபு – முனைவர் குடவாயில் (புத்தக அறிமுகம் )
இந்த புத்தகம் கோபுர கலையின் தோற்றம், வடிவங்கள் மற்றும் அதன் தத்துவங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. அதிலும் “கோபுரம்” என்ற சொல்லின் ஆய்வு, இந்தியக் கலை மரபில் கோபுரங்களின் தோற்றம், அதன் வளர்ச்சி மற்றும் கோபுரம் உணர்த்தும் தத்துவங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபுரங்களை எவ்வாறு கட்டுகிறார்கள் என்றும், ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கோபுரங்களின் வளர்ச்சியைப் பற்றியும், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், கட்டிடக்கலை பொருட்களின் வழியில் செங்கற் கோபுரங்களை பற்றியும், இதுவே அரண்மனைகளிலிருந்தால் அதன் வாயில்களைப் பற்றியும், இக்கோபுரங்கள் எவ்வாறு புணரமைக்கப்பட்டு உள்ளன என்பதைப் பற்றியும்…