Category கட்டுரைகள்

இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்களின் தாக்கம்

இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்களின் தாக்கம் முன்னுரை மனிதன் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் இயற்கையின் செயல்பாடுகளாகும். பிறப்பது இன்பத்துடன் வரவேற்கப் படுகின்றன. இறப்பது துன்பத்துடன் வெறுக்கப்படுவது. முன்னது தாலாட்டாகவும், பின்னது ஒப்பாரியாகவும் இருவேறு நிலைகளில் மக்களால் பாடப்பட்டு வருகிறது. ஒப்பாரிப் பாடலில் துன்பச் சுவை எளிய நடையில் அமைவதால் இறப்பிற்குத் தொடர்பற்றவரையும் தொடர்புடையவராக்கும் ஆற்றல் ஒப்பாரிக்கு உண்டு.…

புது மண்டபம் வசந்த மண்டபம்

‘புது மண்டபம் வசந்த மண்டபம்’ திருமலைநாயக்கர் கட்டிய சிறந்த கட்டடங்களில் இதுவும் ஒன்று. இது மிகுந்த சிற்ப வேலைப்பாடு அமைந்த கல்மண்டபம். ஆண்டுதோறும் வைகாசித் திங்களில் நடைபெறும் வசந்தோற்சவத்திற்காகக் கட்டப்பட்ட மண்டபம் ஆகும் நாயக்கர் காலத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டதால் ‘புது மண்டபம்’ எனப் பெயர் பெற்றது. இம்மண்டபத்தை சிவபெருமான் கோயிலுக்கு முன் அமைக்க முடிவு செய்தார்.…

அமெரிகோ வெஸ்புகி

அமெரிகோ வெஸ்புகி : அமெரிக்காவை நிஜமாகவே கண்டுபிடித்தவர் ‘ஒரு வேலையை ஒழுங்காகச் செய்யத் தெரியாதா உனக்கு?’ அமெரிகோ வெஸ்புகியை அறிந்தவர்கள் அனைவரும் இந்தக் கேள்வியை அவரிடம் ஒருமுறையாவது எழுப்பியிருப்பார்கள். ஒரு வேலையில் அப்போதுதான் சேர்ந்திருப்பார். அடுத்தமுறை பார்க்கும்போது, அதை விட்டுவிட்டு இன்னொரு வேலையில் இருப்பார். நகைக்கடையில் சேர்ந்திருக்கிறேன் என்பார். இல்லை அது சரியில்லை இப்போது சொந்தத்…

சாணார் தம் பேய் வழிபாட்டின் பூர்வீகம்

சாணார் தம் பேய் வழிபாட்டின் பூர்வீகம் : சாணார்களின் பேய் வழிபாடு ஆழங்காண முடியாத பழைமையில் அதாவது பரம்பொருள் அல்லது வானுலகினர் வழிபாட்டிற்கு இணையான பழைமையில், வேர்கொண்டிருக்கிறது. எப்போதும் கெடுதி செய்யும் விரோதிகளான மூலப்பேய்களின் வெற்றிகள், அவை பற்றி வேதங்களில் காணும் மறைமுகக்குறிப்புகள், ஒரு வரலாற்று உண்மையின் புராணக் கருத்தாகக் கருதப்படும் பட்சத்தில் பேய்வழிபாடானது வேதிய…

மாரநாட்டுக் கருப்பு

மாரநாட்டுக் கருப்பு : கோவில் அமைந்துள்ள இடம்: திருப்புவனத்தில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிலும் திருப்பாச்சேத்தியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஊர் மாரநாடு. கேரளத்தில் இருந்து வந்த கருப்பர் நிலையாகத் தங்கிய இடம் இந்த மாரநாடு ஆகும். மாரநாட்டுக் கருப்பர் என்றாலே சிவகங்கை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெரியாதவர்கள்…

சிற்பம் தொடர்பான நூல்கள்

கோவில் ஸ்தபதிகள் மற்றும் சிற்பகளுக்குத் தேவையான கோவில் கட்டடக்கலை சிற்ப சாஸ்திரம் தொடர்பான நூல்கள் Heritager.in The Cultural Store 1. சிற்பச் செந்நூல் விலை: 600/- Buy this book online: 2. ஆலய நிர்மாண பிம்பலஷ்ணம் சிற்ப நூல் விலை: 500 /- Buy this book online: 3.…

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் மேட்டுநிலத்தில் மேற்காகவும், கீழ்நிலத்தில் கிழக்குத் திசையிலுமாக அமைந்த இரு குடியிருப்புகளின் சண்டைக்கோழிகள் சிந்துவெளி நகர்களில் போரிட்டன! மொகஞ்சதாரோவில், பொதுவாக நகரைக் குறிப்பதாகக் கருதப்படும் குறியீட்டுடன் இரண்டு சேவல்கள் அருகருகேஇருக்கும் உருவப்பொறிப்புடன் கூடிய முத்திரையொன்றுகிடைத்துள்ளது.(மார்ஷல் முத்திரை எண் 338). நகரைக் குறிக்கும் குறியீட்டுடன் சேவல்களின்…

பழங்குடி மக்களின் இயற்கைப் பாதுகாப்பு முறைகள்

காணிக்காரன் : தமிழகத்திலும், கேரளத்திலும் காணி என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பொதிய மலைப் பகுதியில் காணிகள் வாழ்கின்றனர். மலை சார்ந்ததும் நீர் நிலைகளின் வளம் மிக்கதுமாகிய பகுதிகளில் காணிகள் வாழ்ந்து வருகின்றனர். இப்பழங்குடியினரின் வாழ் விடங்களானது 90 மீட்டர் முதல் 700 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன.…

வேந்தரும் குறுநிலத் தலைவரும்

வேந்தரும் குறுநிலத் தலைவரும் : சங்க இலக்கியங்கள் ஏறத்தாழ அறுபத்தொரு வேந்தர் களையும், பல குடிகளைச் சார்ந்த ஏறத்தாழ நூற்றிருபத் தெட்டுக் குறுநிலத் தலைவர்களையும் பற்றிக் கூறுகின்றன! வேந்தர் குடியினரை விடக் குறுநில மன்னர் குடியினர் எண்ணிக் கையில் மிகுந்துள்ளமை காணத்தக்கதாகும். குன்றுகளாலும், காடுகளாலும், ஆறுகளாலும் ஊடறுக்கப்பட்ட தமிழகம் பல துண்டுகளாகப் பிரிந்திருந்தது. ஒவ்வொரு துண்டிலும்…

சோழ, கேரளத் தொடர்புகள்

சோழ, கேரளத் தொடர்புகள் : சோழ, கேரளத் தொடர்புகளைப் பற்றிய முதல் செய்தியைத் தருவது தில்லைதானத்திலுள்ள இராசகேசரியின் கல்வெட்டு. 1 ஸ்வஸ்திஸ்ரீ தொண்டைநாடு பரவின சோழன் பல் 2 யானைக் கோக்கண்டனாயின ராசகேசரி பன்மனா 3 லுஞ் சேரமான் கோத்தாணு இரவியாலும் தவிசுஞ்சா 4 மரையும் சிவிகையும் திமிலையும் கோயிலும் போனக 5 மும் காலமும்…