Description
ஆங்கிலேயர்களால் தூண்டப்பட்டு, 1815-ஆம் ஆண்டின் கண்டி ஒப்பந்தத்தின் பிரிவுகள் II மற்றும் III) மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் மற்றும் அவரது நாயக்க வம்சத்து உறவினர்கள் இலங்கையின் கண்டி ராஜ்யத்திலிருந்து அகற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.
மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தனது புனிதமான அரச கடமைகளைத் தொடர்ந்து மீறியதால், அவர் மன்னர் என்ற பதவியிலிருந்தும் அதன் அதிகாரங்களிலிருந்தும் நீக்கப்பட்டுப் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்.
மன்னரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்—அவரது முன்னோர்கள், வாரிசுகள், நேரடி மற்றும் மறைமுக வழிவந்த உறவினர்கள், இரத்த உறவு மற்றும் திருமண உறவு கொண்ட அனைவரும்—அரியணை ஏறும் உரிமையிலிருந்து நிரந்தரமாக விலக்கப்படுகிறார்கள்.
கண்டி மாகாணங்களை ஆளுவதற்கு “மலபார்” (நாயக்கர்) வம்சத்தினருக்கு இருந்த அனைத்து உரிமைகளும் பட்டங்களும் முற்றிலும் ஒழிக்கப்பட்டு ரத்து செய்யப்படுகின்றன.
உறவினர்கள் மீதான தடையும் நாடு கடத்தலும்
முன்னாள் மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இரத்த உறவு அல்லது திருமண உறவுடைய அனைத்து ஆண் உறவினர்களும் (அல்லது உறவினர் என்று உரிமை கோருபவர்களும்) கண்டி மாகாண அரசாங்கத்தின் எதிரிகளாக அறிவிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் கண்டி மாகாணங்களுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் அவர்கள் நுழைந்தால், இராணுவச் சட்டத்தின் (Martial Law) கீழ் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாவார்கள்.
கண்டி மாகாணங்களிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மலபார் (நாயக்கர்) வம்சத்தைச் சேர்ந்த அனைத்து ஆண்களும், பிரிட்டிஷ் அரசின் முன்அனுமதியின்றி மீண்டும் கண்டிக்குத் திரும்பக் கூடாது எனத் தடை செய்யப்படுகிறார்கள்.
பிரிட்டிஷ் அரசு இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாயக்க வம்சத்தாரின் ஆட்சி உரிமையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவந்ததோடு, மன்னரின் குடும்பம் மற்றும் அவரது வம்சத்தைச் சேர்ந்த எந்தவொரு ஆணும் கண்டி பகுதிக்குள் மீண்டும் நுழைவதைக் கடுமையான இராணுவச் சட்டத்தின் கீழ் தடை செய்து அவர்களை முற்றிலுமாக தமிழகத்திற்கு நாடு கடத்தியது.
பாண்டிய பிரதிநிதிகள் எவ்வொரு விஜயனுடன் இலங்கை சென்றார்களோ, அதே போல மதுரையில் இருந்து சென்று, இலங்கையில் வீழ்ந்து கிடந்த பௌத்த மதத்தையும், சிங்கள பண்பாட்டையும் பொருளாதரத்தையும் மீட்டெடுத்த, ஒரு மன்னனை, தமிழ் வந்தேறி (மலபார்) என்று கூறி நாடு கடத்திய வரலாறு.
நூல்: கண்டி நாயக்கர்கள் – ராஜசேகர் பாண்டுரங்கன்
முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்நூல்.
முன்பதிவுக்கு Whatsapp மட்டும் செய்யவும்: 097860 68908





