ஜமீன் இனாம் ஒழிப்பு

80

Out of stock

Description

கிராமத்திலே உள்ள விவசாயிக்கு, பண்ணையாரிடம் இருக்கும் பயம், ‘பத்ரகாளியிடம்’ இருக்கும் பயத்துக்குச் சமம்! ஐயா-சாமி-ஆண்டே-எஜமான்-அவுரு-என்று அர்ச்சனை செய்வான். கோயிலுக்குப் போவது போலவேதான், அடக்க ஒடுக்கமாகப் பண்ணை வீட்டுக்குப் போய் வருவான். இடுப்பிலே வேட்டியைக் கட்டிக்கொண்டு, காலிலே முள் தைத்தாலும் பரவாயில்லை என்று செருப்பு இல்லாமல்தான் போவான். பண்ணையாரைக் கண்டவுடன் அடியற்ற நெடுமரம்போல் வீழ்வான் – ஒரு மனு என்பான்! அவ்வளவு அடிமைத்தனம், இதனை ஆங்கிலத்திலே ப்யூடெலிஸம் (FEUDALISM) என்பார்கள். ஏன் என்ற கேள்விக்கே இடமில்லாத அளவுக்கு, மனதிலே அச்சத்தை நிரப்பிவிட்டு, மனிதர்களை அடிமைகளாக்கும் முறை அது. பிரிட்டிஷார் ஆளவந்ததும், தொப்பி போட்ட துரையைச் சுற்றி ஜரிகைக் குல்லாய் அணிந்த ஜெமீன்தாரன்; “இருவரும் நீடூழிகாலம் வாழணும்னு பரந்தாமனைத் தோத்தரிக்கிறேன்” என்றுகூறி, ஜெபமாலையும் கையுமாக நிற்கும் புரோகிதன்; முதுகெலும்பு முறியப் பாடுபட்டு, இந்த மூன்று ரகத்துக்கும் சுக வாழ்வு அளிக்க, விவசாயி! இதுவே முதலாளித்துவ முறை இந்த முறைக்குத்தான் இன்று முறிவு ஏற்பட வேண்டும் என்கிறோம். ஒன்றை விட்டுவிட்டு, மற்றதை முறியடிப்போம் என்றால் முடியாது.

-புத்தகத்திலிருந்து

Additional information

Weight0.25 kg