மாமல்லபுரம் – முனைவர் சா.பாலுசாமி

230

மாமல்லபுரத்தின் கலைப்படைப்புகள் அனைத்தையும் இந்த நூல் படங்களுடன் சிறப்பாக விளக்குகிறது.

Out of stock

Description

காஞ்சியைத் தலைநகராகத் கொண்டு ஆட்சி செய்து வந்த பல்லவர்களின் குடைவரைகள், ஒற்றைக்கற்றளிகள், திறந்தவெளி புடைப்புச் சிற்பங்கள், கட்டுமானச் சிற்பங்கள் என அத்தனை வகையான கலை முயற்சிகளையும் மேற்கொண்ட இடமாக மாமல்லபுரம் இருந்தது. உலகிலேயே வேறெங்கும் காண வியலாத வியத்தகு கலை முயற்சிகளுக்கான இடம் மாமல்லபுரம். இயங்கு சிற்பங்களும், இடையில் நின்று போனதால் என்னவென்று அறிய இயலாத புதிர்கள் நிறைந்து காணப்படும் கலை அமைப்புகளும் இங்கு உள்ளன. காண்போருக்கு கலை, அழகியல் உணர்வையும், சமய வரலாற்றையும் உணர்த்துகிற மிக முக்கியமான காட்சிகளாக மாமல்லை மிளிர்கிறது.

மாமல்லபுரத்தின் கலைப்படைப்புகள் அனைத்தையும் இந்த நூல் படங்களுடன் சிறப்பாக விளக்குகிறது.

வெளியீடு: பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் – தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் – இந்திய அரசாங்கம்

முனைவர் சா.பாலுசாமி எழுதிய மாமல்லபுரம் புத்தகம்