மகா பாரதக் கதை மாபெரும் பழங்கதை, ஆசையால் அழிந்தவன் துரியன்! செஞ்சோற்றுக் கடன் தீர்த்தவன் கர்ணன்! தருமத்தின் வாழ்வு தன்னை சூதுகவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்!
ஆத்து மணலை எண்ணினாலும், அருச்சுணன் பொண்டாட்டிகளை எண்ணமுடியாது! ஐவருக்கும் தேவி அழியா பத்தினி, ஆயிரம் மாந்தர். ஆயிரமாயிரம் மனப் போராட்டமும் வியாசர் வைக்க மறந்த விருந்துதான் தமிழ்நாட்டுப் புற வழக்காறுகளில் வரும் கதை, கதைப்பாடல், கும்மி, கூத்து, வழிபாடு எனப் பரிமாறப்பட்டுள்ளன.
இது தாய்வழிப் பண்பாட்டில் தனித்த திராவிடப் பண்பாடு!
– காவ்யா சண்முகசுந்தரம்
1SBN 978-92-8918