Category கட்டுரைகள்

கல்யாண மகால்: நாயக்கர் கால செஞ்சியின் கம்பீர அடையாளம்

செஞ்சிக் கோட்டையில் அமைந்துள்ள கட்டிடங்களிலேயே பார்வையாளர்களை உடனடியாக ஈர்க்கக்கூடியதும், மிக உயர்ந்து நிற்பதுமான கட்டிடம் கல்யாண மகால் ஆகும். இது ராணி மகால் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டிடம் அரசியின் அரண்மனையாகப் பயன்பட்டது. ராஜகிரி கோட்டைக்குள் அமைந்துள்ள கல்யாண மண்டபம், ஒரு தனித்துவமான அமைப்பு. அதன் கட்டிடக்கலைப் பாணி, விஜயநகர காலத்தின் சிறப்பியல்பு மண்டப (pavilion)…

கணக்குபிள்ளையும் சித்திரகுப்த நயினாரும்

சித்திரை மாதம் முழுநிலவு நாளில் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான வீட்டு விழாக்களில் ஒன்று சித்திரகுப்த நயினார் நோன்பு. குறிப்பாக, ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளிலும், நிலவுடைமைச் சமூகத்தினராலும், வணிகச் சமூகத்தினராலும் இந்த நோன்பு மிகுந்த ஆர்வத்துடன் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறு நிலவுடைமைச் சமூகத்தினரும் சில இடங்களில் இதை அனுசரிக்கின்றனர். இந்த நோன்பின் முக்கிய அம்சம், சித்திரை முழுநிலவு இரவில்…

வேலூர் சக்கிலியர் கோட்டை

வேலூர் கோட்டப்பகுதி முக்கோண வடிவில் அமைந்த மூன்று செங்குத்தான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகள் இயற்கையாகவே உறுதியானவை; இவற்றில் பெரும்பாலும் ஏற முடியாத, பிரமாண்டமான பாறைகள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு மலையும், துப்பாக்கிகள் மற்றும் சுடுகலன்களுக்கான துளைகளுடன் கூடிய உறுதியான கல் சுவர்களால் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று முக்கிய மலைகளும், அறுபது அடி தடிமனுள்ள வலுவான…

செஞ்சியின் நாயகர்கள்

“செஞ்சி அழிந்து சென்னை ஆனது” என்ற ஒரு பழமொழி உண்டு. சென்னை மாநகரத்திற்கு முன்பே செஞ்சி ஒரு முக்கிய நகரமாக விளங்கியதை இது உணர்த்துகிறது. செஞ்சியைக் கைபற்ற ன் நடந்த பல போர்கள் இதற்கு ஓர் உதாரணம். பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஆட்சியாளர்களின் கைகளில் மாறி வந்த செஞ்சி, நாயக்கர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை, மற்றும்…

எழுத்துக்களின் முன்னோடி முத்திரைகள் – எண்ணும் எழுத்தும்

கியூனிஃபார்ம் எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்னரே, பண்டைய மெசபடோமிய மக்கள் கி.மு. 8000 முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பொருட்கள் மற்றும் எண்ணிக்கையைக் குறிக்க களிமண் முத்திரைகளைப் பயன்படுத்தினர். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தபோது, இந்த முத்திரைகளின் பயன்பாடும் விரிவடைந்தது. ஆரம்பத்தில் விவசாயப் பொருட்களைக் கணக்கெடுக்கப் பயன்பட்ட இவை, பின்னர் நகர்ப்புற வளர்ச்சி காரணமாக தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களையும் நிர்வகிக்க…

பண்டைய அமெரிக்காவில் பூஜ்ஜியம் – எண்ணும் முடுச்சும் – எண்ணும் எழுத்தும்

இன்றும் குல தெய்வங்களுக்கும் நாம் ஏதாவது நேர்ந்துகொண்டு அதனை நினைவில் வைத்துக்கொள்ள சேலையில் முடிச்சு போடும் வழக்கமும், காசு முடிந்து வைத்துக்கொள்ளும் வழக்கும் இன்றும் நம்மிடையே உண்டு. இரகசியங்களை அறிந்து கொள்வதை என்பதை மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது என நாம் கேட்டிருப்போம். முடிச்சுகளும் ஒரு காலத்தில் கருத்துக்களை எண்களை வெளிப்படுத்தும் கருவியாகவும், ரகசியக் கருத்துக்களை எண்ணங்களை…

மெசபடோமியாவில் எழுத்து தோன்றியதின் குட்டிக் கதை: ஏன், எப்படி, எதற்கு? – எண்ணும் எழுத்தும்

சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.மு. 3200-ல், மெசபடோமியா மக்கள் எழுத்தைக் கண்டுபிடித்தார்கள். இது பிறரைப் பார்த்து நகல் எடுத்தது அல்ல; அவர்களே உருவாக்கிய ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு. அதே நேரத்தில், எகிப்தியர்களும் தங்கள் சொந்த எழுத்து முறையை உருவாக்கினார்கள். இந்த இரண்டு நாகரிகங்களும், தகவல்களைப் பதிவுசெய்து பகிர்ந்துகொள்வதற்கான வழிகளைத் தேடியதால்தான் எழுத்து உருவானது.…

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி கிரேக்க மெய்யியல் அதன் தனித்துவமான அர்த்தத்தில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் மைலீசிய மரபிலிருந்து தொடங்குகிறது. இச்சிந்தனை மரபின் ஊற்று மிலிட்டசுக்கு உரியதாகும். ஆசியா மைனரின் கரையில் இருந்த சக்தியும் செல்வமும் மிகுந்த கிரேக்க நகரம் மிலிட்டஸ், பெரிய வணிகப் பாதைகள் சந்திக்குமிடமாகவும் வளமான வர்த்தகம் நடந்து கொண்டிருந்த நகரமாகவும் காணப்பட்டது. மிலிட்டஸோடு…

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும்

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்களையும், கட்டிடங்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், அண்மையில் இரண்டு வார கால சர்வதேச விழா ஒன்று நடைபெற்றது. எகிப்தில் பாயும் நைல் நதியில் கட்டப்படும் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்படும் போது, அந்நாட்டின் பல புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்கள் நீரில் மூழ்கிவிடும் என்பதால், அவற்றை…

கவறைச் செட்டி

எழுநூற்றுவர் யார் என்று விளக்கும் கல்வெட்டு திருவிடைமருதூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாலிங்கேஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, சோழர் காலத்தின் கலை, சமூகம், மற்றும் வணிக நடைமுறைகள் குறித்த அரிய தகவல்களைத் தருகிறது. கல்வெட்டின் தொடக்கம் சிதைந்திருப்பதால், எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் இது பொறிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. எனினும்,…