தொல்வழிபாடுகளும் விந்தை சடங்குகளும்

200

Add to Wishlist
Add to Wishlist

Description

முந்நூறு ஆண்டு பழமையான கல்வெட்டுகளையே தெய்வமாக வழிபடும் விந்தையை என்றாவது பார்த்திருக்கிறீர்களா?

மழை வேண்டி விதவைகளுக்குப் பாத பூஜை, பிறந்த வீட்டுக்கு விருந்துக்குச் செல்லும் அம்மன், கண் திருஷ்டி கழிக்க கற்கீறல் ஓவியம், முனியப்பனுக்கு நெகிழி நாற்காலிகள் காணிக்கை என சேலம் மாவட்டத்தின் 38 விநோதமான கிராமிய வழிபாட்டு முறைகளை அச்சு அசலாகப் பதிவு செய்கிறது இந்த நூல். எந்தவொரு கலப்படமும் இல்லாமல், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் தமிழர்களின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும் உணர்வுபூர்வமான நம்பிக்கையையும் இந்தச் சடங்குகள் நமக்கு மிக நெருக்கமாக உணர்த்துகின்றன.

மாமன்னர் அருண்மொழித் தேவன் உள்ளிட்ட சோழ, பாண்டியர்களின் தொன்மையான கல்வெட்டுகளைத் தேடி ஆராய்வதும், தாலி டூர்ஸ் மூலமாக மாணவர்களுக்கான வரலாற்றுப்பண்பாட்டுச்சுற்றுலாக்களைஒருங்கிணைப்பதுமே என் நெடிய பயணம். அந்தத் தேடலின்போது, நம் மண்ணின் தொல் சடங்குகளையும் கல்வெட்டு வழிபாடுகளையும் ஆவணப்படுத்தும் முனைவர் பெ. பெரியார் மன்னன் அவர்களின் இந்த உழைப்பு என்னை வெகுவாக ஈர்த்தது. ஹெரிடேஜர் தளத்தின் வழியே நமது கலாச்சார வேர்களைப் பேசும் இது போன்ற நூல்களை உங்களிடம் கொண்டு சேர்ப்பதை ஒரு பெரும் பொறுப்பாகவே கருதுகிறேன்.

நமது கிராமியப் பண்பாட்டின் ஆணிவேரை அறிந்துகொள்ளவும், மறைந்து வரும் மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் ஒவ்வொரு தமிழரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்று ஆவணம் இது.

உங்கள் ஊரில் இதுபோன்று காலங்காலமாகப் பின்பற்றப்படும் விநோதமான திருவிழா அல்லது வழிபாடு ஏதாவது உண்டா? கமெண்டில் சொல்லுங்கள்!

Comment in the comment section as ‘BOOK’

#TamilBooks #TamilNovel #புத்தகம் #TamilCulture #VillageRituals #Heritager #ThaliTours #TamilHistory #Folklore #BookstagramTamil #Inscriptions

Additional information

Weight0.250 kg