சங்க இலக்கியங்களில் பெண்களின் உணர்வுசார் நுண்ணறிவு – சௌ.வீரலெக்‌ஷ்மி

Description

சங்க இலக்கியங்களில் பெண்களின் உணர்வுசார் நுண்ணறிவு – ஆய்வுக் கட்டுரைகள்
நூலாசிரியர் : சௌ.வீரலெக்‌ஷ்மி
விலை.ரூ.200

அட்டை வடிவமைப்பு : கோபு ராசுவேல்

இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படையாகின்ற நான்கு கூறுகளில் ‘புலனுண்ணறிவு’ (Sensory intelligence), ‘உணர்வு ஒருங்கிணைவு’ (Emotional integration), ‘உணர்வுப் புரிதல்’ (Emotional Understanding), என்னும் மூன்றையும் சங்க இலக்கிய மகளிரின் புறநடத்தை என்னும் பண்பாட்டுக் கூறுகளில் உட்படுத்தி ஆராய்ந்து, அவற்றின் வாயிலாக ‘உணர்வு மேலாண்மை’ (Emotional management) என்னும் உயர்திறனை நுணுகி ஆராய்ந்து உணர்வுசார் புதிர்களுக்கு விடை கண்டிருக்கிறார் என நான் நினைக்கிறேன். சங்க இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு இது ஒரு புதுப் பங்களிப்பாகும்.

– முனைவர் ந.நடராசப் பிள்ளை
ஆய்வுத் தகைஞர்
தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் ஆய்விருக்கை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

சென்னை புத்தக காட்சியில் ‘யாவரும் அரங்கு எண்: 598-B ‘ ல் கிடைக்கும்.