Description
“தஞ்சை பெருவுடையார் கோவில் சோழர் ஓவியங்கள் -வரலாற்றுத் துணுக்குகள்”
புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் சுவர்களை அலங்கரிக்கும் 11 ஆம் நூற்றாண்டுச் சுவரோவியங்கள் குறித்த அரிதான மற்றும் விரிவான பார்வையை இந்த ஈர்க்கக்கூடிய துணுக்குகள் வடிவில் இப்புத்தகம் வழங்குகிறது.
பல நூற்றாண்டுகளாக, இந்தத் துடிப்பான கலைப்படைப்புகளில் பல பிற்கால நாயக்கர் கால ஓவியங்களால் மூடி மறைக்கபட்டதால் பாதுகாக்கப்பட்டிருந்தன. இந்த நூல் அசல் சோழர் கால தலைசிறந்த படைப்புகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது; ராஜராஜ சோழனின் ஆட்சியின் செழுமையான வரலாறு, நுணுக்கமான கலைத்திறன் மற்றும் கலாச்சார உச்சம் ஆகியவற்றை இது ஆராய்கிறது.
பார்வைக்கு விருந்தளிக்கும் வகையில், இந்நூலில் இடம்பெற்றுள்ள சோழர் கால ஓவியங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியோடு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. குறைகள் இருப்பின் பொருத்தருள்க.
பல்வேறு சோழர் காலக் கலை பற்றிய ஆய்வு நூல்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் தஞ்சைப் பெரிய கோவில் தொடர்பான குறிப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், அரசு தொல்லியல் துறை ஆவணங்களில் இருந்தும் பெறப்பட்ட தகவல்கள் போன்றவை, அனைவரும் எளிதில் வாசித்துப் புரிந்துகொள்ளும் வண்ணம் சிறுசிறு துணுக்குகளாக (Snippets) இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
இப்புத்தகத்தின் அச்சுப் பிரதியை (Print Edition) பெற விரும்புவோர் இங்கே வாங்கலாம்.
நன்றி.

