தொழில், குடித்தொழில் – வரையறை

தொழில், குடித்தொழில் – வரையறை

ஒரு சமூகத்தில் நாகரிகமும் பண்பாடும் பளர்வதற்கு அதன் அடிப்படைத் தேவைகளே மூல காரணங்களாக அமைகின்றன. இலக்குகள் இன்றிக் காடுகளிலும் மலைகளிலும் நாடோடிகளாய்த் திரிந்த பண்டைய சமூகத்தினர் தங்களின் நிலையினை உணரத் தொடங்கியபோது தொழில் தோற்றம் பெற்றது. தொழிலுடன் பிணைந்த வாழ்க்கை முறைமையை மேற்கொண்ட தமிழ்ச் சமூகம் அதன் அடுத்தகட்டமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இவ்வளர்ச்சியே பண்பாட்டு உருவாக்கத்தின் தோற்றுவாயாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரலாறு எழுதப்படும்போது சமூகத்தில் வழங்கப்பட்டு வந்த மொழி மற்றும் பழக்க வழக்கங்களின் வரல வரலாறு குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும். அவ்வாறு ஆய்வு நிகழ்த்தப்படும்போதுதான் காலங்காலமாக மறைக்கப்பட்டு வந்த பல்வேறு வகையான வரலாற்று உண்மைகளை மீண்டும் வெளிக்கொணர முடியும்.

தொழில் வரலாறு

இயற்கையாக அமையப்பெற்ற குகைகள்,பாறை இடுக்குகள். புதர்கள் ஆகியவற்றைப் புகலிடங்களாகக் கொண்ட பண்டைய மக்கள் காலப்போக்கில் செயற்கையான வாழ்விடங்களை அமைக்க முற்பட்டனர். மேலும் உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றின் தேவைகள் உணரப்பட்ட அக்காலத்தில் இருப்பிடச் சூழலும் முக்கியத்துவம் பெற்றது. இதன் பொருட்டு விலங்குகளை வேட்டையாடுவதும் நதிக்கரைவோ இருப்பிடங்கள் அதிகமாகத் தோன்றுவதும் தவிர்க்க இயலாதவைகளாயின. இதனை,

நிலப்பகுதிகள் தோறும் தங்கி நிலைத்து வாழத்தலைப்பட்ட மனித சமுதாயம் ஆங்காங்கே இருந்த இயற்கைச் சூ சூழல்களை அடிப் படையாய்க் கொண்டு தமது வாழ்வை அமைத்துக் கொண்டது.’ என்னும் பெ. மாதையனின் கூற்று வழி உறுதிப்படுத்த முடிகிறது.

இவ்வாறு, பண்பாட்டுத் தெளிவினை அடைந்த தமிழ்ச் சமூகம் இயற்கைப் பேரிடர்களான பெருமழை, வெள்ளம். வெயில் ஆகிய வற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இப்பாதிப்பிலிருந்து மீண்டு நதிக்கரையோரங்களில் உருவாக்கிய சிறு குடில்கள், பிற்காலத்தில் உணவுப்பொருள் பாதுகாப்பிற்கும் வேளாண்மைத் தோற்றத்திற்கும் மூல காரணங்களாக அமைந்தன. நதிக்கரையோரங்களில் ஏற்பட்ட இந்நாகரிக வளர்ச்சி தமிழ்க்குடிகள் நிலையானதொரு பண்பாட்டை அடைவதற்கு வித்திட்டது. இவ்வளர்ச்சியை,

வேளாண்மை, விலங்குகளைப் பழக்கி வளர்த்தல், பாதுகாத்தல், பானை செய்தல், களிமண் சுவர்களைக் கொண்டு வீடு கட்டுதல், பளபளப்பான கற்கருவிகளைச் செய்தல் போன்ற, அரும்பெருஞ் சாதனைகளை முதன் முதலில் செய்து முடித்தான். சா. குருமூர்த்தியின் கூற்றினால் உணரமுடிகிறது. எனவே தமிழ்ச் சமூகம் பெற்ற வளர்ச்சி உலக நாகரிகங்களுள் குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெறுவதற்கு வழிகோலியது. எல்லைகள் வரையறை செய்யப்படாமலும் அதிகார மையம் தோற்றம் பெறாமலும் இருந்த இத்தொடக்க கால வளர்ச்சி, பண்பாட்டுத் தெளிவினை நோக்கி நகர்ந்தது. இவ்வாறு நாகரிக வளர்ச்சியடைந்த பண்டைச் சமூகத்தினர். எதிர்பாராமல் நிகழ்ந்த பல்வேறு பேரிடர்களினால் தங்களின் பண்பாட்டு எச்சங்களாக விளங்கிய புழங்கு பொருட்களை அடையாளங் களாக விட்டுச் சென்றனர். இதனை அறியும் பொருட்டுப் பல்வேறு இடங்களில் அகழ்வாய்வு மேற்கொண்ட தொல்லியலாளர்கள் பண்டைக் காலத்தைப் பலவாறு வரையறை செய்தனர். அந்த வகையில் சா. குருமூர்த்தி,

பழங் கற்காலம் (Old stone Age), இடைக் கற்காலம் (Middle Stone Age), கடைக் கற்காலம் (Late Stone Age), புதிய கற்காலம் (New stone Age). என வரலாற்றுக் காலத்தைப் பாகுபாடு செய்கின்றார். இவற்றில், புதிய சுற்காலம் எனப்படும் கி. மு. 1000 முதல் கி.பி. 500 வரையிலான காலத்தில் பழந்தமிழ் மக்களிடம் வழங்கப்பட்டு வந்த பண்பாடு. ‘மெகலிதிய பண்பாடு’ எனத் தொல்லியலாளர்களால் சுட்டப் படுகின்றது.’ இக்காலத்தில்தான் சங்க இலக்கியம் முதற்கொண்டு தமிழின் அனைத்து இலக்கியங்களும் தோன்றியதாகப் பி.டி. சீனிவாச ஐயங்கார் (தமிழர் வரலாறு. கி.பி. 600 வரை), வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் (தமிழரின் தோற்றமும் பரவலும்), கா. சிவத்தம்பி (பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி) உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் சுட்டுகின்றனர்.

தமிழகத்தில் புரத வண்ணார்கள்
₹300
Buy Link: https://heritager.in/product/thamizhagathil-puratha-vannargal/

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?

1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்

Related Post

தமிழர்களின் வரலாறு என்ன? ஒரு பருந்துப் பார்வைதமிழர்களின் வரலாறு என்ன? ஒரு பருந்துப் பார்வை

தமிழ் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடங்குவது. தமிழ், மொழியும் சரி மக்களும் சரி, அறிந்த ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக்கு முந்தியவர்கள். ஆவணம் இல்லாமல் எப்படி வரலாற்றுக்கு முந்தியது என்று ஒன்றைச் சொல்ல இயலும்? கிடைக்கும் சான்றுகளை வைத்து, அதற்கு முன் என்ன

பண்பாடுகளின் கலங்கரை விளக்கங்கள்பண்பாடுகளின் கலங்கரை விளக்கங்கள்

“ஒரு காவல் தெய்வம் கோயில், அங்கு மிக அழகிய வண்ண மயமான காவல் தெய்வம், அனுமன் சிலை, விநாயகர் சிலைகள் ஒரே இடத்தில் உள்ளன. பல கடவுள்களை வழிபடும் முறை நம்மிடையே உண்டு என்பதின் வெளிப்பாடாய் நான் இப்படத்தை பார்க்கிறேன். இக்கோயில்

சத்ரிய சிகாமணியும், சூளாமணியும் – Names of Tamil Chola King and The Malaya Peninsular Srivijaya Kingசத்ரிய சிகாமணியும், சூளாமணியும் – Names of Tamil Chola King and The Malaya Peninsular Srivijaya King

சத்ரிய சிகாமணியும், சூளாமணியும்   ஸ்ரீவிஜய (இந்தோனேசிய – மலேய தீபகற்பம்) மன்னன் சூடாமணிவர்மனின் நினைவாக, தமிழகத்தில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரம் எழுப்பப்பட்டது. இதனை செப்பேட்டின் வடமொழி மற்றும் தமிழ் பகுதி சூளாமணி பன்ம விகாரத்து (சூடாமணி வர்ம) என