அழிந்து போன இராஜராஜ சோழனின் நாடகம் :
கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சீவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கின்றது என்று கூறியுள்ளது காணத்தகும் :
“இளைமையங் கழனிச் சாயம் ஏறுழு தெரிபொன் வேலி
வளைமுயங் குருவ மென்றோள் வரம்புபோய்
– வனப்பு வித்திக்
கிளைநரம் (பு) இசையும் கூத்தும் கேழ்த்தெழுந் தீன்றகாம
விளைபயன் இனிதின் துய்த்து வீணைவேந்(து)
– உறையு மாதோ.”
“நாடகத்தை விரும்பிக் காண்பவர் கண்களைத் தோண்டியும் . இவ்வாறு பிறரை ஐம்பொறியால் நுகராமல் தடுத்து யாமும் நுகர்ச்சியைக் கைவிட்டேம்” என வரும் தொடர், சமணர் நாடகத்தை எந்த அளவு வெறுத்தனர் என்பதை நன்கு காட்ட வல்லது.
”நாடகம் நயந்து காண்பார் நலங்கிளர் கண்கள் சூன்றும்”
– முத்தி இலம்பகம்,2989
இவற்றால், சிந்தாமணி எழுதப்பெற்ற கி. பி. 10-ஆம் நூற்றாண்டில் நாடகங்கள் தமிழ்நாட்டில் கடிக்கப் பெற்றன என்னும் உண்மையை உணரலாம்.
பிற்காலச் சோழர் காலத்தில் ஆண்டுதோறும் வைகாசி விழாவில் தஞ்சை இராசராசேசுவரத்தில் இராசராசேசுவர நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. அதனை நடித்துக் காட்டிய விசயராசேந்திர ஆச்சாரியனுக்கு ஆண்டுதோறும் 120 கலம் நெல் தரப்பட்டது.இராச ராசன் தஞ்சாவூரில் பெரிய கோவிலைக் கட்டிய முறை, அவனது வரலாறு, அவன் மனைவியர் அக்கோவிலுக்கு அளித்த நிவந்தங்கள், அக்கோவிலைப் பற்றிக் கருவூர்த் தேவர் பாடியது போன்ற பல செய்திகள் இந் நாடகத்தில் பல காட்சிகளாக அமைந்திருக்கலாம்.
விக்கிரமாதித்த ஆச்சாரியன் என்ற இராசராச நாடகப்பிரியன் என்பவன் பந்தணை நல்லூரில் நட்டுவப் பங்கு, மெய்ம்மட்டிப்பங்கு (நாடகக்காணி) இவற்றைப் பெற்றவனாய் இருந்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுவதால், இராசராச நாடகம் (முதலாம் இராசராசனைப் பற்றியது) என ஒன்று இருந்தது, அந் நாடகம் நடிக்கப் பட்டது என்பவற்றை அறியலாம். இந்நூலில் இராசராச னுடைய இளமைப் பருவம், அவன் அரசனானமை, போர்ச் செய்திகள், ஆட்சிமுறை, இராசராசேசுவரம் எடுப்பித் தமை,நம்பியைக் கொண்டு திருமுறைகள் தொகுத்தமை முதலிய செய்திகள் பல காட்சிகளாக இடம் பெற்றிருக்கலாம்.
முதற் குலோத்துங்கன் காலத்தில் பூம்புலியூர் நாடகம் என்ற ஒன்று செய்யப்பட்டது. அதனைச் செய்தவனுக்குப் பரிசு தரப்பட்டது.” அது திருப்பாதிரிப் புலியூரைப்பற்றியது; அம்மன் கன்னிகையாயிருந்து சிவக வழிபட்டது, அப்பர் சமணராயிருந்தமை, பின்பு சைவ ரான்மை,சமணருடைய கொடுமைகளுக்கு ஆளானமை, பிறகு கடலில் மிதந்து கரை சேர்ந்தமை, திருவதிகைக்கு கோவிலில் பதிகம் பாடினமை மகேந்திரன் அங்கிருந்த் சமணப் பள்ளியை அழித்துக் குணபர ஈசுவரம் கட்டி னமை போன்றவற்றைக் காட்சிகளாகக் கொண்ட நூலாக இருக்கலாம். அது நடிக்கப் பெற்றமைக்குச் சான்று இல்லை யாயினும், சமயப்பற்று மிக்கிருந்த அக்காலத்தில் அது நடிக்கப்பட்ட தௌக் கருதுதல் தவறாகாது. இங்ஙனம் நாயன்மார்களையும் அரசர்களையும் பற்றிய நாடகங்கள் சில வேனும் அக்காலத்தில் நடிக்கப்பட்டன என்று கொள்ளலாம்.
தமிழகக் கலைகள் – மா.இராசமாணிக்கனார்
150/-
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?:
1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்