கிராமியப்பாடல்கள் அறிமுகம் :
கிராமியப்பாடல்கள் என்பது கிராமத்தில் வாழுகின்ற மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறைமைகளைக் கொண்டு முன் ஆயத்தம் இன்றி தன் எண்ணங்களை, உணர்வுகளை, பிரச்சினைகளை, மனக்கிடக்கைகளை, பேச்சுவழக்குச்சொற்களை கொண்டும், மனக்கிடக்கைகளைத் தனக்கு தெரிந்த மெட்டில் பாடி இசையமைத்து பாடுகின்ற பாடல்கள் கிராமியப்பாடல்கள் எனப்படும்.
கிராமியப்பாடல்களை பல பெயர்கொண்டு அழைப்பர். அதாவது இசை, கிராமிய நாட்டுப்பாடல்,நாட்டுபுறப்பாடல், கிராமப்புறத்து இசை, நாடோடிப்பாடல், நாட்டார்பாடல், பாமரர்பாடல், பாமரஇசை, பாமரகானம், பரம்பரைப்பாடல், ஊலீப்பாடல் கல்லாதார் பாடல், மக்கள்பாடல், பொதுஇசை, செவிவழிப்பாடல், ஏட்டில் எழுதாக்கவிதை,காற்றில் மிதந்த கவிதை, மலையருவி, காட்டுப்பூக்கள், வனமலர், என கிராமியப்பாடல்களை மறுபெயர் கொண்டு அழைப்பர். (இந்திய இசைக்கருவூலம், பக்கம் -47)
கிராமியப்பாடல்களுக்கு மறுபெயர்கள் உள்ளன. போன்று மட்டக்களப்பு மாவட்ட கிராமியப்பாடல்களில் பலவகைகளும் காணப்படுகின்றன. விவசாயப்பாடல், மீனப்பாடல், சடங்குப்பாடல், கொம்புமுறிப்பாடல், தாலாட்டுப்பாடல், ஒப்பாரிப்பாடல், கூத்துப்பாடல், கும்மிப்பாடல், என ஏராளமாக மட்டக்களப்பு கிராமியப்பாடல் வகைகள் காணப்படுகின்றன.
கூத்துப்பாடல்கள் :
கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர் மத்தியிலே பறைமேளக்கூத்து, மகிடிக்கூத்து, வசந்தன் கூத்து, தென்மோடிக் கூத்து, வடமோடிக் கூத்து, போன்ற பாரம்பரிய நாடக வடிவங்கள் (வுலீநயஉவசந குழசஅள) காணப்படுகின்றன. ஏனைய கூத்துக்களை விட தென்மோடிகூத்து, வடமோடிக்கூத்துக்கள் மிக வளர்ச்சிபெற்ற நாடகவடிவங்களாகும். இத்தகைய கூத்துக்கள் ஏனைய மாகாணங்களைவிட கிழக்குமாகாணத்தில் இ;ன்றுநிலைத்திருக்க பிரதானகாரணம் இங்கு பழமை பேணப்படுகின்றமை என்றால் மிகையாகாது. (நாடகம் – அரங்கியல் பக்கம் -01)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்காலத்தில் வடமோடி, தென்மோடி, வசந்தன் கூத்து, பறைமேளக்கூத்து, மகுடிக்கூத்து என்பன காணப்படுகின்றன.
வசந்தன் கூத்துப்பாடல் :
வசந்தன் கூத்து என்பது பன்னிருவர் வட்டமாய் நின்று கோல்கொண்டு தாளஅமைதி பிசகாது ஆடும் ஓர்ஆடல் எனலாம்.இவ் ஆடலில் சமயக்கரணங்களுடன் சம்பந்தப்பட்டது ஊரில் மழை பெய்யாதபோது ஊரினை இரண்டாக பிரித்து வடசேரி, தென்சேரி என இரண்டாகப்பிரித்து, கொம்புமுறிப்பார்கள், இதில் வெற்றி கொண்டோர், இக்கூத்தினை ஆடிமகிழ்வர். மற்றும் கண்ணகி அம்மன் மதுரையை எரித்துகோபத்துடன் வருகை தந்தபோது அவளை மகிழ்விக்க சிறுவர்கள் ஆடிய கூத்து வசந்தன் கூத்து தான் என்பது ஐதீகம், கண்ணகி அம்மன் குளிர்த்திநாட்களிலும் இக்கூத்து ஆடப்படுகிறது வசந்தன் கூத்தில் கதையில்லை மாறாக ஆடலும்; பாடலும் உண்டு. இக்கூத்தானது விடிய விடிய நடைபெறும். இக்கூத்தில் மத்தளமும், சல்லரியுமே வாத்தியமாக கருதப்பட்டன. (நாடகம் – அரங்கியல், பக்கம் -97)வசந்தன் கூத்துப்பாடல்கள் ஏராளமாகக் காணப்படுகின்றது. அவையாவன பிள்ளையார் வசந்தன். களரி வசந்தன், ஆறுகம்பு வசந்தன், தேவிவசந்தன், கிறுகு வசந்தன், முசுறு வசந்தன் முயிற்று வசந்தன் என ஏராளமாக காணப்படுகின்றன.
கலைத்தமிழ் ஆய்வுகள் கலங்கள் – கோ.விசயராகவன்
₹360
Link : https://heritager.in/product/kalaitamil-aayvu-kalangal