Menu

ஐரோப்பிய வணிகர் வருகை

ஐரோப்பிய வணிகர் வருகை :

தொடக்கத்திலிருந்தே இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு மிடையே சிறப்பான வாணிகம் நடைபெற்று வந்தது. அலெக்ஸாந்தர் காலத்தில் கிரேக்கர்கள் வடஇந்தியா மீது படையெடுத்த காலத்திற்குப் பிறகு இந்தியா மீது எந்த ஐரோப்பிய நாடும் படையெடுத்ததில்லை. வாணிபத் தொடர்பே தொடர்ந்து இருந்தது. அவ்வாணிபத் தொடர்பு ஏறத்தாழ இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட, அலெக்ஸாந்திரியா துறைமுகத்தின் வழியாகக் கடல் வாணிபமாகவும், பாரசீக நாட்டின் வழியாக நிலவழி வாணிபமாகவும் திகழ்ந்தது. அத்தகைய ஐரோப்பிய-இந்திய வாணிபத்திற்கு அடிகோலியவர்களில் அலெக்ஸாந்தரும் ஒருவர் போர் வீரர்கள் வந்து சென்ற வழியின் மூலமாகவே வணிகர்களும் வந்து செல்லலாயினர். ஐரோப்பாவையும், ஐரோப்பியரையும் பற்றி இந்தியரும், இந்தியாவையும் இந்தியரையும் பற்றி ஐரோப்பியரும் மேலும் மேலும் நன்கு அறிந்து கொண்டனர். அதன் விளைவாக ஒரு நாட்டுப் பொருள்கள் மற்ற நாட்டினரால் விரும்பப்பட்டு வாணிபம் வளர்ந்தது. ஆயினும் செல்வத்திற் சிறந்த நாடு இந்தியா என்னும் கொள்கை வெளிநாடுகளிலெல்லாம் வலுத்திருந்தது. கொளக்கொளக் குறையாச் செல்வம் இந்நாட்டில் உண்டு என்னும் எண்ணத்தால் உலகில் எப்பகுதியிலிருந்த வணிகர்களும் இந்தியச் சந்தையில் விற்கவும் வாங்கவும் விழைந்தனர். மேலை ஐரோப்பிய நாடுகள் கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவோடு வாணிபம் செய்ய விரும்பியமைக்குப் பல காரணங்கள் உண்டு.

கி.பி. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் ரோமானியப் பேரரசு வலுக்குன்றிய போது தென்னிந்தியாவோடு அப்பேரரசு நடத்திய கடல் வாணிகம் மிகவும் குறைந்தது. ஆயினும் நிலவழியாக நடைபெற்ற வாணிகம் வடஇந்தியாவையும் ஐரோப்பிய நாடுகளிற் சிலவற்றையும் சில நூற்றாண்டுகளுக்குப் பிணைத்தது. கான்ஸ்டாண்டிதோபில், ஆண்டியோக் முதலிய நகரங்களின் வழியாக இவ்வாணிபம் நடைபெற்று வந்தது. வந்தும் கி.பி. 12.13 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்நிலைமை சிறிது சிறிதாக மாறத் தொடங்கிற்று, மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரை நாடுகளான துருக்கி, சிரியா, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்த அராபியர்கள் ஆதிக்கம் பெற்றபோது ஐரோப்பியக் கிறித்தவர்களுக்கும். இஸ்லாமிய அராபியர்களுக்கும் இடையே சிலுவைப் போர்கள்

நடந்தன. அப்போதே ஐரோப்பியர்கள் பொதுவாக ஆசிய நாடுகளோடும், சிறப்பாக இந்தியாவோடும் நடத்தி வந்த வாணிகம் இயற்கையாகக் குன்றியது. கி.பி.1453 துருக்கியர்கள் கிறித்தவர்களிட மிருந்த கான்ஸ்டான்டி நோபில் நகரத்தைக் கைப்பற்றியபோது வாணிக வழிகள் தடைப்பட்டன. வெனிஸ், நேபில்ஸ், மார்சேல்ஸ். லிஸ்பன். லண்டன் முதலிய ஐரோப்பியத் துறைமுகங்களின் வாயிலாக அதுவரை நடைபெற்று வந்த வாணிகம் நசித்துப் போகும் நிலையை எய்தியது ஆகவே பழைய கீழ்த்திசை வாணிக வழிகளைக் கைவிட்டுப் புதிய வழிகளைக் காண வேண்டித் தங்கள் கவனத்தை மேற்கே திருப்பினார். கிழக்குத் திசையைக் கைவிட்டு, மேற்குத் திசையில் தங்கள் கப்பல்களைச் செலுத்திய ஐரோப்பியக் கடலோடிகள் அட்லாண்டிக் மாக்கடலைக் கடந்து கனடா, அமெரிக்கா, மேலை இந்தியத் தீவுகள், பிலிப்பைன் தீவுகள் வாயிலாகப் பல புதிய வழிகளையும் கண்டு பிடித்தனர். அவர்களில் கொலம்பஸ். டிரேக். காபட். பிரா பிஷர், மெகல்லன், அமெரிகோ வெஸ்புகி. வாஸ்கோடகாமா முதலிய கடலோடிகள் முக்கியமானவர்கள். அவர்களில் கொலம்பஸ் அமெரிக்காவையும் வாஸ்கோடகாமா இந்தியாவையும் முதன்முதலாகக் கடல் கடந்து வந்து அடைந்தவர் களாவர். இங்ஙனம் வாணிப நிமித்தம் இந்தியாவிற்கு ஒரு கடல் வழி கண்டு பிடித்த வாஸ்கோடகாமாவைப் பின்பற்றிப் பல போர்த்துகீசியர்கள் வாணிப நிமித்தம் இந்தியாவை வந்து அடைந்தனர். ஆயினும் நாளடைவில் தங்கள் வாணிபத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்நாட்டுச் சிற்றரசர்களிடமிருந்து அவர்கள் அனுமதியின் மேல் சில இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு இங்கு வாணிப நிலையங்களை நிறுவிக் கொண்டனர். இந்நிலையிலிருந்து செயற்பாட்டின் காரணமாகவோ, தன்னியல் பாகவோ இவர்கள் இந்திய அரசுகளிடையே எஞ்ஞான்றும் இடையறாது நிகழ்ந்து வந்த பூசல்களில் கலந்து கொண்டு இறுதியில் இந்நாட்டு மன்னர்களை ஒவ்வொருவராகக் கீழ்ப்படுத்தித் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை இந்நாட்டில் நிறுவிக் கொண்டமை. இந்திய வரலாற்றின் 18,19 ஆம் நூற்றாண்டுச் செய்தி. இங்ஙனம் இங்கு வந்து எய்திய ஐரோப்பிய வணிகர்களில் காலத்தால் முந்தியவர்கள் போர்த்துகீசியர். அவர்களுக்குப்பின் டச்சுக்காரர்கள், டேனிஷ் காரர்கள். பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று பல வகையினராவர். இவர்களிடையே ஆதிக்கப் போட்டி தோன்றி ஒருவரையொருவர் அழித்து வந்த நிலையில் எஞ்சி நின்றவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களே 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனி எனப்பெற்ற ஒரு வாணிபக் குழுவின் வாயிலாகவும். அந்நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பார்லிமெண்டு வாயிலாகவும் இந்நாட்டை ஆண்டனர். ஐரோப்பிய வணிகர்களின் ஆதிக்கப் போட்டியின் வரலாறு 18 ஆம் நூற்றாண்டையது. போர்த்துகீசியர் தென்னிந்தியாவின் மேற்குக் கரைக்கு வந்து அடைந்து வாணிப அரசியல் ஆதிக்கங்களைச் செலுத்திய வரலாற்றினை அடுத்துக் காண்போம்.

இந்திய வரலாறு – டாக்டர் ந . சுப்ரமண்யன்
660/-

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?:

1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. எங்கள் சமூக வலைத்தள பக்கங்களை Subscribe செய்யுங்கள்
3. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
4. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
5. பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களில் எங்கள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நூல்களை பரிசாக அனுப்புங்கள்.

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்