Menu

எழுத்தாளர் ராஜ் கௌதமன் நூல்கள் – Raj Gowthaman Books

தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார்.

ராஜ் கௌதமன் (Raj Gowthaman)(பெப்ரவரி 14, 1950 – 13 நவம்பர் 2024) தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், தலித் சிந்தனையாளர், பேராசிரியர் ஆவார். பழந்தமிழ் பண்பாட்டு வரலாறு சார்ந்து முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர்.

ராஜ் கொளதமன் 1950ல் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயர்பெயர் எஸ். புஷ்பராஜ் என்பதாகும். இதனை எஸ். கௌதமன் என்று மாற்றிக்கொண்டார். விருதுநகரில் தொடக்கக் கல்வி பயின்ற ராஜ் கொளதமன் மதுரையில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை முடித்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளநிலை, தமிழிலக்கியத்தில் முதுகலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். அ. மாதவையா பற்றிய ஆய்வுகளுக்காக முனைவர் பட்டம் பெற்றார்.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக பணியாற்றி, 2011இல் ஓய்வு பெற்றார். இவரது மனைவி க. பரிமளம். இந்த இணையருக்கு மருத்துவர் நிவேதா எனும் ஒரு மகள் உள்ளார்.

இவருடைய தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு எனும் நூல் சங்க இலக்கியம் பற்றிய சிறந்ததொரு ஆய்வு நூலாகும். 1990களில் தலித் அரசியல் எழுச்சி பெற்றபோது தமிழ்ச் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இச்சூழலில் ராஜ் கௌதமனின் இந்நூல் 1994இல் வெளிவந்தது சிறப்புக்குரிய ஒன்றாகும்.

ஆய்வுக் கட்டுரைகள்:

  1. க.அயோத்திதாசர் ஆய்வுகள்
  2. பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்
  3. ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்
  4. தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,
  5. அறம் அதிகாரம்
  6. அ.மாதவையா
  7. தலித்திய விமர்சனக் கட்டுரைகள்
  8. கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக.
  9. கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.
  10. ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்
  11. ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்

புதினங்கள்

  1. சிலுவைராஜ் சரித்திரம்
  2. காலச்சுமை
  3. லண்டனில் சிலுவைராஜ்