வேளாண் பயன்கள் :
அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விதை அறிவியல், உதவிப் பேராசிரியரான ப. வேணுதேவன் அவர்களும், வேளாண் விரிவாக்கம் ஆய்வாளரான மு.வ.கருணா ஜெபா மேரி, இந்து இதழுக்காய் எழுதிய கட்டுரையில், வேளாண் பயன்கள் சிறப்பாய் சொல்லப்பட்டுள்ளன. அது இப்பகுதியில் தரப்பட்டுள்ளது.
சிறு கூலங்கள் எளிதாய் அனைவரும் சாகுபடி செய்ய ஏதுவான பல சிறப்பியல்புகளைக் கொண்டவை. நெல் விளைவதற்கு 120-180 நாட்கள் மற்றும் கூடுதல் தண்ணீர் (1,000 4,500 மி.மீ) தேவைப்படும். ஆனால், சிறு கூலங்களுக்குக் குறைவான அளவு தண்ணீர் (250-400 மி.மீ) இருந்தாலே போதுமானது.
பெரும்பாலான சிறு கூலங்கள் பயிரிடப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் அதாவது 65-90 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். மிதமான தட்பவெப்ப நிலையிலும் நன்றாய் வளரக்கூடியவை,மண்வளம் குறைந்த இடங்களிலும் சாகுபடி செய்யலாம், மானாவாரிச் சாகுபடிக்கு ஏற்றவை, வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை, சிறு கூலங்கள் சாகுபடியில் பூச்சி, நோய்த் தாக்குதல் மிகக் குறைவு. மற்ற பயிர்களுக்குக் கொடுப்பதைப் போல கூடுதலான ஊட்டத்தைச் சிறு கூலப் பயிர்களுக்குக் கொடுக்கத் தேவையில்லை.குறைவான அளவுக்குக் கொடுத்தாலே போதுமானது.
நெல் மாதிரியான பகலில் ‘பூக்கும்’ பயிர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்போது, கூடுதல் வெப்பம் இருந்தால் சரியான முறையில் விதைகள் உற்பத்தியாகாது. ஆனால், சிறு கூலப் பயிர்கள் அனைத்தும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்குள் மகரந்தச் சேர்க்கையை முடித்துக்கொள்வதால், வெப்பநிலைப் பிரச்சினைகள் இல்லாமல் முழுமையான அளவில் மகரந்தச் சேர்க்கை நடைபெற்றுக் கூடுதல் மகசூல் கிடைக்கும். புவி வெப்பமாதலால் ஏற்படும் இழப்புகள் சிறு கூலத்தில் மிகவும் குறைவு. சிறு கூலச் சாகுபடியில் குறைந்த அளவு வேலையில், குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைக்கும். சிறு, குறு விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியில் சிறு கூலங்கள் சாகுபடி பெரும் பங்கு வகிக்கிறது. பனிவரகு என்பது அற்புதமான ஒரு சிறு கூலம். பனிக்காலத்தில் எந்தப் பாசனமும் இல்லாமலேயே பனிப்பொழிவினால் கிடைக்கும் நீரிலேயே வளர்ந்துவிடக் கூடியது.
சிறு கூலத்தில் நாட்டு ரகங்களுடன், மகசூல் கூடுதல் தரக்கூடிய பல பல்கலைக்கழக ரகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. சிறு கூலப் பயிர்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் பல புதிய ரகங்கள் வெளியிடவும் திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2013 முதல் சிறு கூல மகத்துவ மையத்தைத் தொடங்கி கேழ்வரகு, தினை, சாமை, பனிவரகு போன்ற சிறு கூலப் பயிர்களில் Aஜிலி 1 என்ற ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கரோனா பெருந்தொற்றுப் பரவத் தொடங்கியதிலிருந்து மக்களின் உணவு முறையில் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் நிறைந்த உணவு வகைகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன.இந்நிலையில், இவ்வளவு சிறப்பு மிக்க நம் நிலத்தின் பயிர்களான சிறு கூலச் சாகுபடிக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, கவனம் செலுத்துவதனால் உடல் நலத்திற்கு மட்டுமின்றி, விவசாய நிலங்களின் சூழலியல் சமநிலையையும் பாதுகாத்து, சிறு கூலங்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும்.
இப்படி, சிறு கூலங்களைப் பயிர் செய்வதால் பல்வேறு வேளாண் பயன்களும் உள்ளன.
1. 65-90 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும்.
2. மிதமான தட்பவெப்ப நிலையிலும் நன்றாய் வளரக்கூடியவை.
3. மண்வளம் குறைந்த இடங்களிலும் சாகுபடி செய்யலாம்
4. மானாவாரிச் சாகுபடிக்கு ஏற்றவை.
5. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை.
தமிழர் உணவு தமிழ் இலக்கியங்களில் சிறு கூலங்கள்
160 /-
Buy link : https://heritager.in/product/tamilr-unavu-sanga-ilakkiynkalil-siru-kulankal/
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?:
1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. எங்கள் சமூக வலைத்தள பக்கங்களை Subscribe செய்யுங்கள்
3. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
4. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
5. பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களில் எங்கள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நூல்களை பரிசாக அனுப்புங்கள்.
உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்